காலக் கழிவுகளில்
மிச்சமாய் மீந்ததெல்லாம்
நினைவுகளும்; தடங்களுமே;
நாம் விட்டுச் சென்ற
தடங்கள் மட்டுமே – நாளை
நமக்கான வரலாற்றை பேசுகிறது;
நாமெல்லாம்
இன்றினை நோக்கி
வாழ்வதாகவே நினைத்துக் கொள்கிறோம்,
நிறைய பேருக்கு தெரிவதேயில்லை –
நாளைய வரலாற்றை தான்
நாம் இன்றே எழுதுகிறோமென;
ஒரு வரலாற்றை
புரட்டிப் போடவேண்டிய –
பாதி தொலைவில் தான்
நீயும் நானும் நிற்கிறோம்;
சற்று சிந்தித்தால்
சற்று முயற்சித்தால்
சற்றினை தாண்டி –
உழைக்க முற்பட்டுவிட்டால்
நம் நாளைய வரலாறும்
இன்றே புரட்டி போட்டுக் கொள்ளப் படும்;
அவரவர் வாழ்க்கையும் வரலாறும்
அவரவரே எழுதிக் கொள்கிறார்க்ளென
சொல்வதற்கெதற்கு கவிதை!
———————————————————-
வித்யாசாகர்