வேண்டாத கவிதை

காலக் கழிவுகளில்
மிச்சமாய் மீந்ததெல்லாம்
நினைவுகளும்; தடங்களுமே;

நாம் விட்டுச் சென்ற
தடங்கள் மட்டுமே – நாளை
நமக்கான வரலாற்றை பேசுகிறது;

நாமெல்லாம்
இன்றினை நோக்கி
வாழ்வதாகவே நினைத்துக் கொள்கிறோம்,
நிறைய பேருக்கு தெரிவதேயில்லை –
நாளைய வரலாற்றை தான்
நாம் இன்றே எழுதுகிறோமென;

ஒரு வரலாற்றை
புரட்டிப் போடவேண்டிய –
பாதி தொலைவில் தான்
நீயும் நானும் நிற்கிறோம்;

சற்று சிந்தித்தால்
சற்று முயற்சித்தால்
சற்றினை தாண்டி –
உழைக்க முற்பட்டுவிட்டால்
நம் நாளைய வரலாறும்
இன்றே புரட்டி போட்டுக் கொள்ளப் படும்;

அவரவர் வாழ்க்கையும் வரலாறும்
அவரவரே எழுதிக் கொள்கிறார்க்ளென
சொல்வதற்கெதற்கு கவிதை!
———————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சிலல்றை சப்தங்கள். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s