சிங்கள ரத்த விழியில்
தமிழ் கனல் தகிக்க வந்தவனே;
எங்களின் மூடிய புத்தியை கிழித்து
இன ரத்தம் காட்ட வெந்தவனே;
வீட்டு –
தொலைகாட்சி சப்தத்தில்
அடைந்த காதுகளில் அறைந்து –
ஈழ – வெடி சப்தம் கேட்க, வைத்தவனே;
உலக எல்லைகோடு வரை
தமிழரை நாணப் பட வைத்து
சற்று ஈழம் காக்க சொன்னவனே;
எங்கோ விழும் பிணத்தை
எடுத்து –
பார்-இது-உன், உறவென காட்டிச் சென்றவனே;
இந்திய துரோகம் மறந்து
தூங்கிய இளைஞர்களை தட்டி எழுப்பி
வீரம் புகட்ட எரிந்தவனே –
இன்னும் கூட
நாங்கள் என்ன செய்தோம்?????
இன்னொரு முறை பிறந்து வந்து
மிச்சமுள்ளவர்களுக்காய் –
சற்று எரிந்துக் காட்டு;
அல்லது எரித்து செல் முத்துக் குமரா!!
—————————————–
வித்யாசாகர்