உலகம் புரட்டிப் பார்த்த வரலாறு
இன்னும் திகட்டிவிடாத பெரும் பேரு;
காலம் கட்டிக் கொண்ட மதம் பாரு
கருணை ரத்தமாய் சொட்டிய நிஜம் பாரு!
ஏழைக்கெல்லாம் இனி ஏது கண்ணீரு
ஏற்றத் தாழ்வு ஒழித்த கடவுள் பாரு;
உனக்கும் எனக்கும் கி.மு; கி.பி ஏது
ஏசு பிறந்து எத்தனை மாறியது பாரு!
முள்கிரீடம் அணிந்து கையில் ஆணியடித்து
சிலுவையில் அறைந்த ‘அந்தோ’ கொடுமை பாரு;
உயிர் பிரிந்து சென்றும் நமக்காய் –
மூன்றாம் நாள் விழித்து வந்த அதிசயம் பாரு!
தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்
வெறும் வாய் வார்த்தையா(?) இல்லை கேட்டுப் பாரு;
கண்மூடி கேட்டால் பிதாவின் கருணை புரியும்
ஒரே – ஒருமுறையேனும் ஜபித்து பாரு!
ஜாதி வேரறுத்து ஏழை குடி காத்த
எங்கள் கர்த்தரை பாரு –
பிறர் பாவங்களுக்கும் அறியாதிழைத்த தவறுகளுக்கும்
ஏசு கொடுக்கும் கருணை மன்னிப்பும்; மறுவாழ்வும் பாரு!
உலகெல்லாம் பறந்து விரிந்த கர்த்தரின்
விசுவாசம் பாரு;
கடைகோடி வீட்டில் கண்ணீரென்றாலும் – போக்க
பிறப்பெடுத்த ஏழைகளின் ஐயா; ஏசு கிருஸ்த்து பாரு!
இரண்டாயிரம் வருடம் தொலைந்தும்
தொலையாத கிறிஸ்மஸ் பண்டிகை பாரு;
இரத்தமாய் சிந்தி; அறைந்த சிலுவையில் – உயிரை விட்ட
பிதாவின் அன்பிற்கு –
நாம் காட்டும் ஒரு நன்றி; கிறிஸ்மஸ் கொண்டாட்டம் தானே ஜோரு!
——————————————————————————————————-
வித்யாசாகர்