மனிதம் பிறப்பிப்போம்!

னக்கும் எனக்குமான நிகழ்வுகளில்
பாசமும் போட்டியும் எப்படியோ
நிகழ்ந்தே விடுகிறது;

யாரேனும் ஒருவர் தோற்பதை ஒருவர்
எப்படி வெற்றியென மெச்சிக் கொண்டோமோ?

ந்த மெச்சுதலில் தான்
தோன்றி போயின எத்தனை கோடுகள் –
நாடென்றும் இனமென்றும் மதமென்றும்
ஜாதியென்றும் –
மொத்தமாய் மனிதத்தை கொன்றுவிட்டு!

ங்கோ போகிறது நம் வாழ்க்கை
கல்கி பிறப்பார் கடவுள் வருவார்
அதிஷ்டம் அடிக்கும் என்றெல்லாம்
சேர்த்து வைத்திருக்கும் –
நாளைக்கான அத்தனை எதிர்பார்ப்பையும்
தூக்கி எறி;

வா, இன்றைக்காய் இந்த பொழுதிற்காய்
எல்லாம் மறந்து மனிதராய் மட்டும்
கட்டி அனைத்துக் கொள்வோம்!
——————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே... Bookmark the permalink.

6 Responses to மனிதம் பிறப்பிப்போம்!

  1. siva சொல்கிறார்:

    nice really very nice

    Like

  2. kavi சொல்கிறார்:

    யாரேனும் ஒருவர் தோற்பதை ஒருவர்
    எப்படி வெற்றியென மெச்சிக் கொண்டோமோ?
    nice lines.
    yes.we are always taught to succeed in life,without knowing the meaning of success.no matter how we did it.

    Like

  3. thee.thamizhiniyan சொல்கிறார்:

    அண்ணன் வித்யாசாகர் அவர்களுக்கு………….மனிதம் பிறபிப்போம் கவிதை மனிதத்தை கொஞ்ச கொஞ்சமாக கொள்பவரின் உயிரை உரசி பார்க்கும்,இறந்து கொண்டு இருக்கும் மனிதத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.உங்கள் எழுத்து பயணம் இன்னும் இன்னும் தொடரவும்,அனைவரையும் போய் சென்றடையவும் வாழ்த்துகிறேன்……………
    என்றும் அன்புடன்……………
    தி.தமிழினியன்

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s