உலகத்தில் பேர் சொல்ல தலைவருண்டு
நீ மட்டுமே – தமிழர்களை தலைவனாக்க
தலைவனானாய்;
உலக நாடுகள் தன்னை நீட்டி விரித்துக்
கொண்ட போது – நீ மட்டுமே – தமிழனுக்கும் தனி
நாடுண்டென ஈழத்துக் கொடி பிடித்தாய்;
புலி விரட்டிய தமிழச்சியின் தவப் புதல்வனே
தொப்புள் கொடி உறவறுத்து – தமிழருக்கு
அண்ணனான அண்ணலே;
வாழ்வது ஒருமுறை; வீழ்வதும் ஒருமுறை
இரண்டில் எதுவாயினும் ஈழத்திற்கேயென
போர்புரிந்த மாவீரனே;
செய்திகளுக்கு தீனி போட்டு..
வீடுகளுக்கு புகழில் வெள்ளையடித்து..
அதிகார வர்க்கத்தில் –
எதையும் அசைத்து விடுவதாய் எண்ணி வாழும்
பல உலகமகா தலைவர்களை தாண்டி
விடுதலையென்னும் ஒற்றை சொல்லுக்காய்
வாழ்வின் அரை தூரம் கடந்து விட்ட மாசிலா மன்னனே;
நீ பிறந்தாய் –
தமிழரின் தனி அடையாளத்தை
உலகம் தெரிந்துக் கொண்டது!
நீ பிறந்தாய் –
தமிழரின் தீரம் இதுவென்று கண்டு
உலகமே அதிர்ந்து நின்றது!
நீ பிறந்தாய் –
சிங்களனின் திமிரெங்கோ
தலைகவிழ்ந்து வீழ்ந்தது!
நீ பிறந்தாய் –
ஈழ தேசம் ஒட்டுமொத்த தமிழரின்
கனவு தேசம் ஆனது!
இதோ.. கனவு தேசம் கைகூடும்
நாளின்னும் வெகு தொலைவிலில்லை..
எங்களின் ஒற்றை தலைவனே..
கனவு தேசம் இனி எங்களின் –
லட்சிய தேசமென முழங்குவோம்;
இந்த லட்சிய தேசம் வெல்லும் நாளில்
உன் பிறந்த தினம் தானே – எங்களின்
முடிசூடும் ஈழ திருநாளாகும்!
————————————————-
வீர எழுச்சி மிகு அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் நல்
வாழ்த்துக்களுடன்…
வித்யாசாகர்
மாசில்லா மன்னன்,எங்கள் ராஜராஜ சோழருக்கு கவிதை தந்த வித்யாவுக்கு நன்றிகள் பல.
LikeLike
பதவிக்கு மன்னனானாலும் பண்பிலும் அன்பிலும் நம் அண்ணனானவராயிற்றே செல்வா.. நம் ஒரே உன்னத தலைவரில்லையா.. மாசிலா அன்பின் மன்னன்!
LikeLike
அவருக்கு ஈடும் இல்லை இணையும் இல்லை
LikeLike