காற்று நிலம் நீர் வானம்; அனைவருக்குள்ளும் அடக்கம்!

ரெல்லாம் மனிதர்களுண்டு
உனக்கோ எனக்கோ ஒன்றென்றால்
மனிதரில் அத்தனை மனிதமில்லையே;

நிலம் செடி கொடி மரம்
எல்லாம் பல்கி பெருகியதுண்டு
எல்லோரின் தேவைக்கும் எல்லாம் கிடைப்பதில்லையே;

காற்று நீர் வானம்
பரந்து விரிந்து கிடக்க
‘தன்’ சுவாசமும் பார்வையும் பருகலுமாய்
தானே நம் வாழ்க்கை???

தீயதை எட்டிப் பிடித்துக் கொள்ளும்
இதயம் –
நல்லதை விலகி நிற்குமிடமே நம்
குற்றத்தின் ஆராம்பப் புள்ளியெனக் கருதுக!

சொல்லின் அடி ஆழத்தில் நிகழும்
அர்த்தம் அன்பின் பிறப்பிடமென தோன்றின்
இடைவெளிகள் இறுக்கமாகலாம்,
இறுக்கத்தில் பிறக்கும் தோழமை
உறவென நீளலாம்,
நீண்ட உறவின் அன்பிலும் பிணைப்பிலும் –

காற்று நிலம் நீர் வானம் மரம் செடி கொடி
அத்தனையும் –
நம் அனைவருக்குமாகலாம்!

அன்பே அனைத்தின் அடியுரமெனக் கொள்க!
———————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே... Bookmark the permalink.

2 Responses to காற்று நிலம் நீர் வானம்; அனைவருக்குள்ளும் அடக்கம்!

  1. கவிஞானசக்ரவத்தி சொல்கிறார்:

    “காற்று நிலம் நீர் வானம் மரம் செடி கொடி
    அத்தனையும் –
    நம் அனைவருக்குமாகலாம்!”

    ஆக்க வேண்டும்.இல்லையேல் 2012 என்ன அதற்கு முன்பே உலகம் அழிந்தாலும் வியப்பேதுமில்லை.

    அனைவரும் சமம் என்பதை உணர்ந்து.
    அன்பை பகிர்வோம்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s