ஊரெல்லாம் மனிதர்களுண்டு
உனக்கோ எனக்கோ ஒன்றென்றால்
மனிதரில் அத்தனை மனிதமில்லையே;
நிலம் செடி கொடி மரம்
எல்லாம் பல்கி பெருகியதுண்டு
எல்லோரின் தேவைக்கும் எல்லாம் கிடைப்பதில்லையே;
காற்று நீர் வானம்
பரந்து விரிந்து கிடக்க
‘தன்’ சுவாசமும் பார்வையும் பருகலுமாய்
தானே நம் வாழ்க்கை???
தீயதை எட்டிப் பிடித்துக் கொள்ளும்
இதயம் –
நல்லதை விலகி நிற்குமிடமே நம்
குற்றத்தின் ஆராம்பப் புள்ளியெனக் கருதுக!
சொல்லின் அடி ஆழத்தில் நிகழும்
அர்த்தம் அன்பின் பிறப்பிடமென தோன்றின்
இடைவெளிகள் இறுக்கமாகலாம்,
இறுக்கத்தில் பிறக்கும் தோழமை
உறவென நீளலாம்,
நீண்ட உறவின் அன்பிலும் பிணைப்பிலும் –
காற்று நிலம் நீர் வானம் மரம் செடி கொடி
அத்தனையும் –
நம் அனைவருக்குமாகலாம்!
அன்பே அனைத்தின் அடியுரமெனக் கொள்க!
———————————————
வித்யாசாகர்
“காற்று நிலம் நீர் வானம் மரம் செடி கொடி
அத்தனையும் –
நம் அனைவருக்குமாகலாம்!”
ஆக்க வேண்டும்.இல்லையேல் 2012 என்ன அதற்கு முன்பே உலகம் அழிந்தாலும் வியப்பேதுமில்லை.
அனைவரும் சமம் என்பதை உணர்ந்து.
அன்பை பகிர்வோம்.
LikeLike
அன்பே சிவம்; கடவுளை அன்பெனக் கொள்க!
LikeLike