உயிரின் அடிநாதத்தில் எழுகிறது
உனக்கான கூக்குரல் –
குண்டு தொலைக்காத உன் தைரியத்தை
ஒரு கப்பல் தகர்த்ததே சோகம்;
தோல்வி நெருங்கிடாத உன்
ராஜா பாட்டையில் –
ஒரு வெற்றி குறுக்கிட்டு
உயிர் தின்றதே வலிக்கும் ரணமானது;
எதிரியின் உறக்கத்திலும் –
உயிர் தைக்கும் மரணபயத்தை
உன் வீரிய புயலின் வளர்ச்சி கொடுத்தும் – அதை
காலம் தின்று வரலாறு பேசுகிறதே – வருத்தமில்லையா;
இரண்டில் ஒரு கால் இழந்தும்
இரட்டை குழல் துப்பாக்கி ஏந்தி
எவர் வரினும் தவிடு தவிடாக்கிய உன் வீரத்தை
ஒற்றை கப்பல் பறித்துக் கொண்டதே; நியாயமா???
இன்று உலகமறிந்த இந்திய சூழ்ச்சிக்கு
என்றோ பறையடித்து மானம் வென்ற மாவீரா;
உன் உயிர் உறைந்த எம் ஈழ தேசம் –
உன் நினைவுகளால் உன்னை –
எங்களில் உயிர்பித்திருக்குமென்றே கர்ஜிக்கிறோம்!
கப்பல் தகர்த்ததா(?) கடுந்தீ தின்றதா(?) எல்லாம்
வரலாற்றில் இருக்கட்டும்;
இதயத்தில் விளக்காக என்றுமே எரியும்
ஈழ தீபமே; அண்ணன் கேணல் கிட்டுவே;
ஒரு சபதம் புரி;
என்று வரை ஈழ காற்று வீசுமோ
என்று வரை தமிழாள் உயிர் கொள்வாளோ
என்றுவரை ஒரு ஈழ தமிழருக்கான சுவாசம் இயங்குமோ
என்றுவரை தமிழனின் கடைசி சப்தம் அடங்குமோ
அன்றுவரை அத்தனை இதயமும் உனை தாங்கியே
உயிர் பூண்டிருக்கும்;
உனக்காய் ஒரு சொட்டேனும் கண்ணீர்
சொட்டிக் கொண்டே இருக்கும்!!
—————————————————–
வித்யாசாகர்
கவிதை நன்றாகவுள்ளது..
LikeLike
தாங்கள் வந்ததில் பெருமை கொள்கிறேன்.. மீண்டும் மீண்டும் வருவதற்கான அழைப்பை அன்பினால் தொடுக்கிறேன்..
LikeLike
மனம் கனக்கிறது, அருமை சகோ
LikeLike
மிக்க நன்றிப்பா.. உங்களன்பில் தானே என் எழுதுகோலே வளம் கொள்கிறது
LikeLike
கேணல் கிட்டு வின் வரலாறு அறிய தூண்டியமைக்கு நன்றி அண்ணா.
LikeLike
அறியப் பட வேண்டியவர்கள் நிறைய பேருள்ளார்கள் ; அறிந்துக் கொள்ள தான் நாமே நம்மை தயார் செய்து கொள்ளல் வேண்டும் கவி..
LikeLike