அணையா தீபம்; கேணல் கிட்டு

யிரின் அடிநாதத்தில் எழுகிறது
உனக்கான கூக்குரல் –
குண்டு தொலைக்காத உன் தைரியத்தை
ஒரு கப்பல் தகர்த்ததே சோகம்;

தோல்வி நெருங்கிடாத உன்
ராஜா பாட்டையில் –
ஒரு வெற்றி குறுக்கிட்டு
உயிர் தின்றதே வலிக்கும் ரணமானது;

எதிரியின் உறக்கத்திலும் –
உயிர் தைக்கும் மரணபயத்தை
உன் வீரிய புயலின் வளர்ச்சி கொடுத்தும் – அதை
காலம் தின்று வரலாறு பேசுகிறதே – வருத்தமில்லையா;

இரண்டில் ஒரு கால் இழந்தும்
இரட்டை குழல் துப்பாக்கி ஏந்தி
எவர் வரினும் தவிடு தவிடாக்கிய உன் வீரத்தை
ஒற்றை கப்பல் பறித்துக் கொண்டதே; நியாயமா???

இன்று உலகமறிந்த இந்திய சூழ்ச்சிக்கு
என்றோ பறையடித்து மானம் வென்ற மாவீரா;
உன் உயிர் உறைந்த எம் ஈழ தேசம் –
உன் நினைவுகளால் உன்னை –
எங்களில் உயிர்பித்திருக்குமென்றே கர்ஜிக்கிறோம்!

கப்பல் தகர்த்ததா(?) கடுந்தீ தின்றதா(?) எல்லாம்
வரலாற்றில் இருக்கட்டும்;
இதயத்தில் விளக்காக என்றுமே எரியும்
ஈழ தீபமே; அண்ணன் கேணல் கிட்டுவே;

ஒரு சபதம் புரி;
என்று வரை ஈழ காற்று வீசுமோ
என்று வரை தமிழாள் உயிர் கொள்வாளோ
என்றுவரை ஒரு ஈழ தமிழருக்கான சுவாசம் இயங்குமோ
என்றுவரை தமிழனின் கடைசி சப்தம் அடங்குமோ
அன்றுவரை அத்தனை இதயமும் உனை தாங்கியே
உயிர் பூண்டிருக்கும்;

உனக்காய் ஒரு சொட்டேனும் கண்ணீர்
சொட்டிக் கொண்டே இருக்கும்!!
—————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

6 Responses to அணையா தீபம்; கேணல் கிட்டு

  1. கவிதை நன்றாகவுள்ளது..

    Like

  2. siva சொல்கிறார்:

    மனம் கனக்கிறது, அருமை சகோ

    Like

  3. கவிஞானசக்ரவத்தி சொல்கிறார்:

    கேணல் கிட்டு வின் வரலாறு அறிய தூண்டியமைக்கு நன்றி அண்ணா.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s