நம்பிக்கை
வாழ்கையில்
ஜெயிப்பதற்கு
ஒரு வழி சொல்லேனென்றேன்
பட்டாம்பூச்சியிடம்,
பட்டாம்பூச்சி சொன்னது
‘பறந்துக் கொண்டே இரு
எங்கோ ஒரு மூலையில்
உனக்கான ஓரிடம்
நிச்சயம் காத்திருக்குமென்று’
நானும் –
பறந்துக் கொண்டேயிருக்கிறேன்
எனக்கான இடமின்னும் –
வரவே இல்லையே யென
நினைக்கையில் –
உலகம் பேசிக் கொண்டது –
‘அதிக தூரம்
பறந்து சாதித்தவன்
உலகிலேயே
நான் தானாம்!’
——————————-
வித்யாசாகர்