மிச்ச நாட்களின்; மீதி வாழ்க்கை!

வ்வொரு இடமாக நகர்கிறது
வாழ்க்கை;
கேட்டது கிடைத்ததோ இல்லையோ
தேவைகள் கூடி கூடி
குறைத்துக் கொண்டே வருகிறது –
நமக்கான உயிர்ப்பை!

ள்ளும் புறமும் உண்மை ஒழித்து
பொய்மையில் புழங்கிக் கிடக்கும் –
நம் ஏதோ ஒரு கண்மூடி தனத்தில்
தொலைந்து போகிறது மனிதனுக்கான யதார்த்தம்!

னம் சொல் சிந்தனை செயலென
அத்தனையிலும் வீரியம் கொண்ட மனிதன்
மனிதத்தை இழந்ததில் தான் –
தன்னையும் இழந்து விட்டான் போல்!

காலம் செய்யும்; செய்யும் தான்,
ராகுகாலம் எமகண்டம் இன்னபிற
கெட்ட நேரமென நாமே காலத்தை
கொன்று குவிக்கையில் –
வெற்றிக்கான கால அளவு
எங்கோ நம் மூடத்தில்; முடங்கித் தானே போகிறது!

வெற்றியும் தோல்வியும் கூட வலிதில்லையே
வாழ்வின் குறைந்த தூரங்கள் வலிதில்லையா –
பேசிக் கழித்த பொழுதுகள் போகட்டும்,
நாட்காட்டி பார்த்து செயல்பட்ட –
மூடதனம் போகட்டும்,
மேல்சாதி கீழ்ஜாதி பிரித்துக் கொண்ட –
ஏகாந்தம் போகட்டும்,
மதம் இனமென நம் தோள்களில் சுமற்றிய
உறவுகளின் உயிரருத்த கொலைகளும் –
நமக்குள்ளே நாம் செய்துக் கொண்ட
கொள்ளைகளும் போகட்டும்,
மனிதன் தனக்காய் வாழாமல்
பிறர் சொல்லையே ஏற்று வாழ்ந்து மடிந்த
காலங்கள் போகட்டும் போகட்டும்…

வாஸ்த்தும் மந்திர கல்லும்
கடவுளின் ஈர்ப்பினால் –
எல்லாம் மாயையென போர்த்திய
கபடத் தனங்களும் ஒழியட்டும்;

ல்லாம் அநீதி தனமும் தின்று துப்பியத்தில்
நமக்கான மிச்சம் மரணம் மட்டுமே என்பதை
உயிருள்ள போதே கைவிடுவோம்!

மக்கான வாழ்க்கை –
இன்னும் மிச்ச்மில்லாமலில்லை!
——————————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே... Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s