தந்தை திருவேங்கடம் வேலுப் பிள்ளைக்கு சமர்ப்பணம்

ரு வரலாற்றின்
இரத்தம் பாய்ச்சி –
உயிர் தந்த கோடியே;

முடங்கிப் போன இனத்திற்கு
முழக்கம் கொடுத்த –
உயிர்மூச்சே;

உலகின் எல்லை கோடு வரை
ஈழம் – தலைநிமிர
தலைமகனை தந்த வரமே;

தேசியம் கற்பிக்க
எங்கள் தேசியத் தலைவனை
பெற்றெடுத்த பேரே;

உன் மூடிய கண்களிலிருந்து
எந்த சுதந்திரம் –
எங்களுக்காய் பிறக்குமோ பிறக்கட்டும்;

விடுதலை காற்றின்
இலட்சிய மூச்சு – உன் மூச்சென
உலகம் அறியட்டும் –
அறியாமல் போகட்டும்;

உன் மரணமென்னும்
ஒற்றை வார்த்தையின்
இரட்டை அர்த்தம் –
உலகிற்கே புரியட்டும்!
——————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s