தமிழன் –
மல்லாக்கப் படுத்து
வானம் பார்த்து துப்பிய
எச்சில் சிதறல்களில் – கேட்கிறது
‘ஹேப்பி பொங்கலி’ன் சப்தம்;
திரும்பி படு தமிழா
படுத்தது போதும் எழுந்து நில்
நிமிர்ந்து வானம் பார்
துள்ளி பூத்து பிரகாசிக்கும் –
சூரிய வெளிச்சத்திற்கு –
நன்றியறிவிக்கும் பொங்கலை பார்த்து
பொங்கலோ பொங்கல்; பொங்கலோ பொங்கல்
எனக் கூவு………….
வாழ்வு பொங்கட்டும்!
அனைத்து அன்புள்ளங்களுக்கும் அழகிய தமிழில் வாழ்த்தறிவிக்க வேண்டி –
அன்பு நிறைந்த என் பொங்கல் தின வாழ்த்தினையும் தெரிவிப்பவனாய்…
வித்யாசாகர்