வரிசையாய் நிற்கும்
நோயாளிகளின் வலி கூட்டும்
நிர்வாகம்;
தெய்வம் வந்து தாங்கிடாத
பொழுதுகளில் –
மனிதனை உயிர்ப்பிக்கும் விஞ்ஞான வளாகம்!
பணம் போட்டு
நலம் காக்கும்
பொதுசேவை வியாபாரம்;
பணம் தாண்டியும்
மனிதம் சுரப்பிக்கும் கடவுள்கள்
மருத்துவர்களாக மாறிய இடம்!
உயிரோடு
விளையாடி –
தொழில் கற்கும் ஏகாந்தம்;
உயிர் கொடுத்தும்
உயிர் காக்கும் –
மதம் தாண்டிய மருத்துவாலயம்!
ஏழைகளின் உயிர் வருத்தியும்
உயிர் காத்தும் வளரும் –
செங்கல், மண் கட்டிடம்;
எத்தனையோ பணக்கார மருத்துவர்கள்
இரவு பகலை தொலைத்து –
மருத்துவம் பார்க்கும் மனிதநேய மண்டபம்!
சகோதரிகளின்
கவனக் குறைவால் –
உயிர் தின்னும் பொழுதுபோக்கிடம்;
மருத்துவரில்லாத அவசரத்தில்
உயிர் காத்த – செவிலித் தாய்களின்
அன்பு பூக்கும் தளம்!
இவை எல்லாம் கடந்து –
எத்தனையோ அலறல்களும்
கண்ணீர் கதறல்களும் –
உயிர்பிரிந்த கணப் பொழுதுகளும்
ஒரு ரசாயன மனமாய் காற்றில் கலந்து
காற்றாக மாறிய இடம்!
————————————————————————————-
வித்யாசாகர்
ஆம்.எல்லாத் துறைகளிலும் இந்த இரு வேறு மாதிரியான மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
LikeLike
ஆம்; நாணயத்தின் இருபக்கம் போல்!
LikeLike
குடியரசன்று கொடி குத்தி, குழந்தையை அடித்தாய், இந்த பெண்களின் சமூகத்தை கிழிக்கும் நாசக்காரர்களை எப்போது அடிப்பாய்?
LikeLike
உங்கள் கேள்வி தான் என் பயணமும்; இப்போதைக்கு எழுதவே முடிகிறது, என்றேனும் ஒரு நாளில் எல்லாமே முடியலாம். முடியாத கணமொன்று வருகையில் நானே முடிந்துப் போயிருக்கலாம்.
வருகைக்கு நன்றி தாமோதரன்!
LikeLike