வெள்ளித்திரையில் வெளிவராத.. (சினிமா) (17)

லக ரசனையை திரும்பிப் பார்க்க வைத்த
முதல் சாதனை –
பணத்தை கொட்டி – இறைத்து – வாரிய
பிரம்மாண்ட வியாபாரம்!

சதைக்கும் தோலுக்கும்
முதலிடம் கொடுத்து –
முடிவில் மனசாட்சி பற்றி பேசும்
மனிதர்கள் குவிந்த நவீன சந்தை!

உழைப்பை –
திரைக்குப் பின் மறைத்துக் கொண்டு
சொகுசாக வந்தவனுக்கு –
கம்பள வரவேற்பும் கட்டவுட்டும் வைக்கும்
கலை துரோகம்!

திறமையும் போலித் தனமும்
திறமையும் சிபாரிசும் –
திறமையும் பணமும் புகழும் உள்ளதால் வளர்ந்த
நிறைய பொய்முகங்களின் கூடாரம்!

பதினாறு வயதில் நடிக்கவந்து
மரணம் வரை நடிப்பு கனவாகவே கடந்த
எண்ணற்றவர்கள் –
ஆவியாய் கூட வாய்ப்பு வேண்டித் திரியுமிடம்!

முகத்தை எடுப்பதாக நினைத்து
முழு உடலை குடிக்கும் கேமரா கண்களுக்கு
பெண்மையை இரையாக கொடுத்துவிட்டு – வெறும்
பணத்தில் குளிக்கும் – நிறைய நங்கைகளின்
நிஜம் தொலைந்த திரை காவியம்!

முடிக்கப் படாத படமும்
ஒடுக்கப் பட்ட மனிதர்களின் கதறலும்
தோற்றுப் போன இளைஞனின் கண்ணீரையும்
வலிமை குறைந்தவனின் ஏமாற்றத்தையும்
மறைத்துக் கொண்டு ஆடும் –
ஆட்டமும் பாட்டும் கும்மாளமும்!

ஒருவன் தோல்வியில்
மொத்தபேரும் தோற்றுப் போகும்
அவல அஸ்திவாரம்!

இரவுபகல் உழைத்தவனின் உழைப்பில்
ஒருவன் அடைந்துக் கொள்ளும் –
வானம் தொடும் – வெற்றுப் புகழ்!

அழகற்று வந்தவனை அரியணை ஏற்றி
அழகான கதானாயக நாயகிகளை –
அசிங்கப் படுத்தி –
திறமைக்கு தரக்குறைவு சான்றிதழ் தந்த
போலியான பல்கலைகழகம்!

விளம்பரத்தில் கொடி உயர்த்தி
வீட்டுக்கு வீடு புகழ் பரப்பி –
அதிஸ்டத்தில் கிடைத்த ஆயிரத்தில் லட்சத்தில்
கோடி படாடோபம் காட்டும் அதிக –
வித்தைகாரர்கள் ஆடுமிடம்!

இருபத்திநான்கு மணிநேரம்
உழைத்த பணத்தில் –
எளியவருக்கு உதவும் ஈர இதயங்களை
கர்பமின்றி பிரசவித்த வயிறு!

உண்மை பேசுவது போலவே
பொய் பேசி – உயிர் போகும்வரை ரத்தம் குடிக்கும்
நய வஞ்சகர்கள் சிலர் நடு மரமிட்டு
அழுத்தமாக அமர்ந்துக் கொண்ட வீடு!

இதத்தனையும் தெரிந்து
தோல்வியின் வேரறுத்து
விடாமுயற்சியில் வேற்றிநடை போட –

நம்பிக்கையை உயிர்வரை பதித்துக் கொண்ட
ஒரு சாதாரண மனிதனை –
வரலாற்றின் உச்சியில் நிறுத்திக் காட்டும்
ஒற்றை ஊடகம்; உலகம் தொட்ட – மெத்த ஊடகம்; சினிமா!
————————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் and tagged , , . Bookmark the permalink.

6 Responses to வெள்ளித்திரையில் வெளிவராத.. (சினிமா) (17)

  1. ரேவதி ராஜேந்திரன் சொல்கிறார்:

    வணக்கம்,

    கொசு கடி யின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உங்கள் கவிதைகளை பார்த்து அறிந்து கொண்டோம். அதே போல் தெரு குழாய், புகைப்படம், சினிமா இவைகள் எல்லாம் கூட தங்களின் அன்றாட வாழ்க்கையின் பாதிப்புகள் தான். ( சரியா? ) இருந்தாலும் அருமையான எதார்த்தங்கள். உங்களுக்கு மக்களிடம் உள்ள ஈர்புத்தன்மை புரிகின்றது. இது தான் உண்மையான நிதர்சனம். நல்லது, உங்கள் பணி தொடர எங்களின் வாழ்த்துகள்.

    நன்றி!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      எழுத்துக்களின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்.

      என் மீது கொண்ட தங்களின் நம்பிக்கையில் நீண்டதொரு பற்று ஆழ்கிறது. ஆழ்ந்த பற்றின் உச்சத்தில் சமூகம் மீதான கோபமே மேலிடுகிறது. மேலிட்ட கோபத்தில்; முளைக்கிறது மீண்டும் மீண்டுமான கவிதை!

      மிக்க நன்றிகள் பல!

      Like

  2. siva சொல்கிறார்:

    உண்மை அண்ணா,

    உங்களின் பிரதிபலிப்பு அருமை

    கொண்டு சேர்த்த விதம் அருமை.

    Like

  3. munusivasankaran சொல்கிறார்:

    //முகத்தை எடுப்பதாக நினைத்து
    முழு உடலை குடிக்கும் கேமரா கண்களுக்கு
    பெண்மையை இரையாக கொடுத்துவிட்டு – வெறும்
    பணத்தில் குளிக்கும் – நிறைய நங்கைகளின்
    நிஜம் தொலைந்த திரை காவியம்//

    கண் திறந்தீர்… மனம் கூசுகிறது.. கண்மூடிக்கொண்டேன்

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s