தெருவுக்கு தெரு டாஸ்மாக்
வீட்டுக்கு வீடு தொலைகாட்சி
மனிதனுக்கு மனிதன் அரசியல் கட்சி
மண்ணாங்கட்டி பொழப்புக்கு வாய்க்கு நூறு இங்கிலீசு
மரத்திற்கு மரம் சிரித்துக் கொண்டன; யாருக்குமே வெட்கமில்லை!
படிப்பு முடியும் முன்னரே பாரின்
படித்து முடித்தாலும் வெட்டி சோறு
பாதி நாள் வேலைக்கு போனால் –
மீதி நாள் பிகரு வெட்டும் சோம்பேறி
சுயநலப் பட்டாளத்திற்கு துளி கூட வெட்கமில்லை!
காமம் தெறிக்கும் பார்வை
காசு பிடுங்கும் அவசரம்
மாடி வீட்டு மீதேறி நின்று –
கீழிருப்பவன் மேல் எச்சில் உமிழத் துடிக்கும்
வெறி பிடித்துத் திரிபவர்களுக்கு –
ஒரு துளியும் வெட்கமில்லை!
முளைச்சி மூனெல விட்டா சினிமா
மூச்சு விடவும் கால் கழுவவும் ஜோசியம்
நாள்காட்டி பேர் சொல்லி –
நேரங்களை தொலைக்கும் மூட தனம்
வீட்டுக்கும் சோத்துக்கும் வாஸ்த்து பார்க்குற ஒருத்தனுக்கும்
வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமேயில்லை!
வாய் கூசாம கேட்கும் லஞ்சம்
ஏமாந்தவன் வண்டி மடக்கும் அசிங்கம்
போலீசுக்குப் பக்கத்துலையே நடக்கும் கொலை
அரசியல் வாதின்னா கொம்பு முளைத்த திமிரு
அரசு வேலை கிடைத்துவிட்டால் –
வங்கியிலும் தபால் நிலையத்திலும் கூட
அரியணையில் அமர்ந்து கொண்டதான மூர்க்கதனம்
கர்ப்பகிரஹத்தில் கற்பழித்த பூசாரிகளை தாண்டியும்
என் தேச கொடி கனகம்பீரமாய்
பட்டொளி வீசி பறக்க உழைத்த
அத்தனை பேருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!
——————————————————
வித்யாசாகர்
சுயநலப் பட்டாளத்திற்கு துளி கூட வெட்கமில்லை!
என் தேச கொடி கனகம்பீரமாய்
பட்டொளி வீசி பறக்க உழைத்த
அத்தனை பேருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!
innum en illiganin desa bakthikku idayam nirandha vazhthukkal
Raghuraj
President and Founder
Sudarvamsam
ஆம்; மிச்சமுள்ள இளைஞர்களின் துடிப்பிலும், முதியவர்களின் பற்றிலும் தான் பறக்கிறது என் தேசக் கொடி! மிக்க நன்றி!
Dear Vidhyasagar, I Salute to you for your Patriasam. (i cannot able to type tamil in my Mac machine) it will take ages also.
keep it up.
மிக்க நன்றி ரகு அவர்களே!
உங்கள் பற்று நெஞ்சம் நெகிழ வைக்கிறது.
இங்கு வந்து தமிழில் தட்டச்சு செய்யலாம். http://www.google.co.in/transliterate/indic/tamil
உங்களின் ரசனையில் சமூகத்தின் ஈர்ப்பு தெரியாமலில்லை!
நல்ல பதிவு!
மிக்க நன்றி சகோதரர்!
அரியணையில் அமர்ந்து கொண்டதான மூர்க்கதனம்
கர்ப்பகிரஹத்தில் கற்பழித்த பூசாரிகளை தாண்டியும்
மன்னிக்கவும் நண்பர் பூசாரி என்று தயவு செய்து குறிப்பிட வேண்டம். பூசாரி என்பது நாட்டார் தெய்வங்களுக்கு பூஜை செய்பவர்களை குறிக்கும். அவர்கள் யாரும் இவ்வளவு தைரியமாக கருவரைக்குள் செய்ய மாட்டார்கள். ஏனென்றாள் அவர்களுக்கு தெய்வ பயம் இருக்கும்.
இவர்களை குருக்கள் அல்லது (அ)சாமி அல்லது அர்ச்சகர், அய்யர், பார்பனர் என்று குறிப்பிடவும் இப்படி உயர் தெய்வங்களுக்கு பூஜை செய்பர்கள் தான் இவ்வாறு செய்வார்கள்.
எங்கள் அய்யா பெரியாருக்கு பின்னர் இவர்களுக்கு மட்டுமே தெய்வம் இல்லை என்ற உண்மை நன்றாக தெரியும்.
அதனால் தான் இவர்களால் கோவிலுக்குள் கொலையையும், கற்பழிப்புக்களையும் தைரியமாக செய்ய முடிகிறது.
கவிதை நன்றாக உள்ளது.
வாழ்த்துக்கள்.
பகலவன்
குவைத்.
இங்கு தவறு செய்யும் பூசாரிகளும் உண்டு. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே!
இந்தக் கவிதையை எங்கள் தளத்தில் வெளியிட தங்கள் அனுமதி வேணடுகிறோம்.
நன்றி!
தாராளாமாக வெளியிடுங்கள். இங்கிருந்து (www.vidhyasaagar.com) எந்த கவிதை வேண்டுமானாலும் எடுத்து நீங்களும் வெளியிடலாம். எழுத்து நாலு பேருக்கு சென்றடையத் தான் தூக்கத்தை விற்று வாங்குகிறேனே என் சகோதரத்துவமே.
நன்றியறிவிக்கிறேன். தொடருங்கள்!
தவறு செய்பவகளுக்கு இது ஒரு நல்ல பாடமான கவிதை அண்ணா. அருமையான கவிதை அண்ணா.
ராஜ ராஜ சோழன்
ஆம்; இது கண்ணியத்தோடு வாழும் அத்தனை பேரையும் தாண்டி; தவறு செய்பவர்களுக்கு மட்டும் உறுத்த வேண்டி எழுதிய கவிதை!
நல்லவர்களுக்கு நிச்சயம் புரியுமென்றே நம்புவோமப்பா. மிக்க நன்றி சோழா!
very good, The people will be come back one days
ஆம்; சகோதரா, வருவார்கள் என்ற நம்பிக்கையில் தான் சுழலுகிறது பூமி. வாழத் துணிகிறோம் நாமும்!
மிக்க நன்றி வெங்கட்..
very nice poem