அது வேலையை அது செய்தது; நீ என்ன செய்தாய்!

தெருவோரம்
நடந்து சென்றேன்
இன்று குடியரசு தினம் வாவென
கொடி குத்திவிட அழைத்தார்கள்.

ஐயோ தேசிய கொடியாயிற்றே
சற்று பொறுயென்று சொல்லிவிட்டு
ஓடி –
குளித்து சுத்த ஆடை அணிந்துவந்து
தேசிய கொடியை –
மார்பின் மேல் குத்திக் கொண்டு
வீட்டிற்கு வந்தேன்;

என் ஒற்றை வயது குழந்தை
ஓடிவந்து –
கொடியை தொட்டு தொட்டுப் பார்த்தது
படாரென பிடுங்கி வாயில் வைத்து கடித்து
இரண்டாய் மூன்றாய் நான்காய் கிழித்து
கீழே வீசிவிட்டு –
ஹே… என்று சிரித்தது;

நான் கோபத்தில்
ஐயோ தேசிய கொடியாயிற்றே என
ஓங்கி ஒரு அரை விடப் போனேன்

கிழிந்திருந்த கொடித் துண்டுகள் கேட்டது-

‘நீ வெறும் கொடி குத்திக்கொண்டு
அலைய நினைத்தாய் –
அது கிழித்தாவது போட்டது!’
——————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே... Bookmark the permalink.

4 Responses to அது வேலையை அது செய்தது; நீ என்ன செய்தாய்!

  1. கவிஞானசக்ரவர்த்தி சொல்கிறார்:

    இலவசத் தொலைக்காட்சியில்,
    நடிகர் நடிகைகளின் குடியரசு தின வாழ்த்தை,
    கண்டும் கேட்டும் ,
    உணர்வற்ற சடமாகித்தான் போனோம்.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      வா.. கவி. ஒரு எழுதுகோலை தாங்கி பிடித்துக் கொள். தமிழாள் ஒரு எழுத்தாளனை சமூகப் பர்ராலனை தான் உன் மூலம் தாங்கி பிடித்துல்லால். என் கோபமும் உங்கள் கூற்றை சார்ந்தது தான்!

      Like

  2. சிவகுமார் சொல்கிறார்:

    நல்ல வேளை வந்தது,
    குடியரசு தினம் – உங்களை
    குளிக்க வைக்க!!!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம்; நாம் குளிப்பதையும் உண்பதையும் பொழுதை கழிப்பதையும் தான் சமூகத்தின் அக்கறையாகக் கொண்டுவிட்டோம். ஆயினும், சுயநலம் கொள்ளிலும் பிறர் வருந்தாது நடந்துக் கொள்வோமெனிலாவது; உயர்வென்றே மெச்சுவோம்!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s