காற்றில் கலந்த ஈழப் புரட்சி – பொன்னம்மான்!

நீ சிரித்துப் பாடிய பாட்டெங்கே
உன் சிரித்த முகமெங்கே
நீ வளர்த்த வீரமிங்கே –
கண்ணீர் விட்டழுகிறதே;

உன் கருணை முகமெங்கே
காற்றில் தீராத உன் பாடல் – தொலைந்துப் போனதெங்கே
விடியாத ஈழ இருட்டில் மேலும் –
நீ பிரிந்த சேதி வலிக்கிறதே;

பெற்ற – தாய் காட்டுமுன் பாசமெங்கே
கொதித்தெழுமுன் கோப துடிப்பெங்கே
உயிர் மூச்சடிங்கி நீ போன தூரமாய் –
நெஞ்சம் கனக்கிறதே; கனக்கிறதே;

எந் தலைவனுக்குத் தந்த தோளெங்கே
போர் கணைகள் படைக்கும் திறமெங்கே
நீ பாடி வளர்த்த புரட்சியின் –
மீதி நினைவுகள் மிஞ்சி எரிக்கிறதே;

எம்; இந்திய முதல் பாசறை ஆண்ட துணிவெங்கே
உன் வெடிமருந்து புலமை போனதெங்கே
ஆயுதம் படைத்து நீ விட்ட ஆயுள்
இருபது – வருடம் கடந்தும் சுடுகிறதே; சுடுகிறதே;

உனை தேடிப் பார்த்த இடமெல்லாம்
நீ இறந்த தடமே கிடைக்கலையே –
நீ காற்றாய் கலந்த உண்மை மட்டும்
வெடித்த – சப்தம் கூறி அடங்கியதே;

காலம் கூறும் கதைகளையெல்லாம்
வரலாறு எழுதிக் கொள்ளும்; கொள்ளட்டுமே
ஈழதேசம் உள்ளவரை – பொன்னம்மான்
இருப்பதாகவே உள்ளம் நம்பும்; நம்பட்டுமே! நம்பட்டுமே!!
———————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம். Bookmark the permalink.

2 Responses to காற்றில் கலந்த ஈழப் புரட்சி – பொன்னம்மான்!

  1. sivacbe சொல்கிறார்:

    வலிக்கிறது…… வார்த்தை வர மறுக்கிறது

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s