கல்லூரியின்
சுவரெங்கும்
காதலன் காதலியின் பெயர்கள்;
நம் பெயரில்லாத
இடத்திலிருந்து துளிர்க்கிறது
உன் பெயரையும் எழுதுவதற்கான
ஆசை;
உன்னை எழுதி ஏன்
அங்கு வைக்கவேண்டுமென;
எழுதாமலேயே வந்து விடுகிறேன்,
நான் கல்லூரியின் சுவர்களில்
எழுதிடாத உன் பெயர் – எனக்குள்
காதலாய்.. காதலாய்.. பூக்கிறது!