காட்டிக் கொடுத்தவன்
திருடித் தின்றவன்
அண்டிப் பிழைத்தவன்
இறந்த –
சகோதரிகளின்
சவத்தின் மீதேறி ஓடிய
ஒருசில துரோகிகள்
சிங்கள இனமானான்.
கைகால் இழந்து
ஈழத்தையே சுவாசித்து
பட்டினி, போர், துக்கத்தால்
இறந்தவன் –
ஈழ விடுதலை வெல்லும்
வெற்றிக் கொடியை
நாளை –
விண்ணில் பறக்கவிக்கும்
காற்றாயினான்!