தியானம் செய்கையில்
மடிமீது வந்து
அமர்ந்து கொள்கிறாய்,
சாமி கும்பிடுகையில்
நானுனை –
தூக்கிக் கொள்கிறேன்.
இடையே –
நீ என் மூக்கை பிடித்து
விளையாடுவாய்..
காதை நோண்டி சிரிப்பாய்..
கைதட்டி என் காதோரம் கத்துவாய்..
எனக்கு –
உள்ளே நான் வணங்கும் கடவுள்
வெளியே –
என்னோடிருப்பதாய் இருக்கும்!