பூமி உருண்டையாம்
இருக்கலாம்,
சுற்றுகிறதாம்
இருக்கலாம்,
இருந்தும் –
என்றோ நாம் தொலைத்த விஷயங்கள்
பூமி சுற்றி வருகையில்
கிடைத்திடாததே வருத்தம் என்கிறோம்,
ஒன்றை புரிவோம் –
நாம் தொலைத்த அனைத்தும்
நம்மை சுற்றியே கிடக்கின்றன;
தொலைத்ததும் –
எடுக்க வேண்டியதும் நாமே; நாமே;
மாற்று வழி இல்லாது
இயற்கையில் ஏதுமே
மறைவதில்லை!!