93 வாழ்க்கையை படி!

த்தனையோ
ஆனந்தாக்கள் –
நம்மை சீர்குலைத்து
பாடம் புகட்டுகிறார்கள்;

நிறைய வங்கி
கொஞ்சம் கொஞ்சமாக
நிறைய வாங்கிக் கொண்டு
நமக்குக் –
கொஞ்சம் தருகிறது;

வேளைக்கு சம்பளமும்
வாங்கிக் கொண்டு –
வேலையையும் முழுதாக செய்யாமல்
மேலே லஞ்சமும் வாங்கி
பின்பும் நாலுமுறை இழுக்கடித்து செய்து
எவனோ கால் மேல் கால் போட்டு
அமர்கிறான்.
இதெல்லாம் தெரிந்தும் நாம்
அவனிடம் கைகட்டியே நிற்கிறோம்;

காலக் கொடுமை…,
எதேவேண்டுமாயினும் இருந்து விட்டுப்
போகட்டும்,
நம் கண் மறைத்து உலகில்
ஒன்றுமே நிகழ்வதில்லை என்பதை
புரிந்து –
தவறு செய்பவனை சட்டை பிடித்து
இழுக்காத வரை –
நம் ஆண்மை கைகட்டிக் கொண்டும்;
எவன் காலோ இன்னொரு கால் மேல்
இட்டுக் கொண்டுமே இருக்கும்!!

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to 93 வாழ்க்கையை படி!

  1. madurai saravanan சொல்கிறார்:

    //தவறு செய்பவனை சட்டை பிடித்து
    இழுக்காத வரை –
    நம் ஆண்மை கைகட்டிக் கொண்டும்;
    எவன் காலோ இன்னொரு கால் மேல்
    இட்டுக் கொண்டுமே இருக்கும்!!//
    really super. i enjoyed all lines.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      உங்களை போன்றோர் படித்தாலே போதும் என்று எண்ணுகிறேன்…, ரசித்தீர்களா???

      உங்களின் ரசனையில் சிலிர்தெழட்டும்; சமூகத்தின் சீர்திருத்தங்கள் மிக சீரிய எழுத்துக்களாய்.. உறவே, மிக்க நன்றி!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s