ஊரெல்லாம்
மரணமும்
மல்லிகை தோரணமும்
வேளை வேளைக்கு சோறும்
உடுத்த பட்டாடையும்
மினுக்க அத்தனையும்
இருந்துக் கொண்டு தானிருக்கிறது;
இறப்பவரை பற்றியும்
அழுபவரை பற்றியும்
வருந்தாத இடத்திலிருந்தே –
சிரிப்பவருக்கும் –
மினுக்குபவருக்கும்
மரணுமும் மல்லிகையும்
மறுபரிசீலனை செய்யப் படுகிறது!