நிறைய நிரபராதிகளின்
வாதம் –
சிறை கம்பிகளுக்கிடையே
நின்று –
உலகை வெறித்தாலும்,
வெளியே நிற்கும்
குற்றவாளிகளுக்கு
வெறும் – பணம் தரும் சிரிப்பு
பணம் தீரும்போதே
நின்றும் விடுகிறது!
நிற்க,
இங்கே சிறைக் கம்பிகளுக்கிடையே
வீழ்ந்த ‘நியாயமே’ பேசப் பட
வேண்டுமெனில் –
நிரபராதிகள்
காலத்தின் கேள்வியாய்
சிறைகம்பிகளுக்கு மத்தியில் நில்லாமையை
நீயும் நானும்
சேர்ந்து சிந்தித்தாலன்றி மாறாது!