அவன் சொன்னான்
இவன் சொன்னான்
எவன் சொன்னாலும்,
அம்மா சொன்னாங்க
அப்பா சொன்னாங்க
தாத்தா சொன்னாங்க
பாட்டி சொன்னாங்க
யார் சொன்னாலும் –
சிந்திப்போம்.
தேவையானதை
அவசியமெனில் –
சரியெனில் –
ஆய்ந்து –
தன் புத்திக்கு ஏற்கும் பதில் இருக்குமெனில்
மட்டுமே – ஆமென்றும் இல்லையென்றும்
ஏற்ப்போம் மறுப்போம்;
நம் சுதந்திர சிந்தித்தலில்
மூடதனம் ஒழியட்டும் –
இறைமை யாதென மொத்த பேருக்கும்
புரியட்டும்!