இன்று எனக்குப்
பிறந்தநாள்,
புது துணியுடுத்தி
எல்லோருக்கும் இனிப்புக் கொடுத்து
தொலைபேசியில் எல்லோரிடமும்
வாழ்த்துப் பெற்றுக் கொண்டு
வீட்டிற்கு வந்து கண்ணாடி பார்கையில்
கண்களின் ஓரம் –
ஒரு சொட்டுக் கண்ணீர் சுட்டது;
தூக்கம் கலைவதற்குள் நீ வந்து
என் காதுகளில் கிசுகிசுக்காத
பிறந்த நாள் ஒரு பிறந்த நாளா!