கண்பட்ட இடமெலாம் கவிதை; கவிதை!!

சிறகின்றி பறக்கும்
துள்ளலின்றி நகரும் மேகங்களுக்குள் ஒளிந்து
அழகுற்ற வான மதப்பில்..
நீண்டு வளைகிறது –
வண்ணம் நிறைந்ததொரு ஓவியம்,

தூரல் மழையின் சிலிர்ப்பில்
காது மடல்கள் அசைவுற –
சிதறும் மழைத்துளிகளின் ஓசை
இயற்கையின் ஜாலமாய்
உள்புகுகிறது இசை,

பசுமையை அள்ளிப் பருகும்
மரங்களின் அசைவுகளில் – காற்று
விளையாடி யுள்ளே –
இதமாய் எழுதும் தென்றல்
தன்னை மறந்து எழுதுகிறதொரு, ‘கால கவிதை’,

சுடும் நெருப்பென தகிக்கும்
வெய்யிலின் வெக்கையில் –
காற்றினை சூடு கொள்ளைகொண்ட – இறுமாப்பை
உடைத்தெறிய –
இலட்சியமின்றி துணிகிறது; மர நிழல்கள்,

முகமெல்லாம் அழுக்கு பூசி
பால்குடி வாசம் கழுகாத மழலையின்
பளிச்சென்ற வெள்ளை சிரிப்பில் – மதிமயங்கி
லயிக்கிறதொரு –
ரசனை பூத்த யதார்த்தம்,

வாசலில் முகம் சாய்த்து
வருகைக்குக் காத்திருக்கும் மனைவியின்
முகம் பார்த்த பரவசத்தில் –
லேசாய் அவளுதிர்த்த புன்னகையில் – பிறக்கிறதொரு
குடும்பத்தின்; வெற்றிப் புன்னகை,

மரக்கட்டைக்குள் எரிக்கையிலோ
மண்கொட்டி மூடும் பொழுதிலோ
மனசு மட்டும் கனவு சுமந்து –
கதறியழ இயலாதா உயிர் போன உடலின்
ஈரத்திலிருந்து நீங்கியிராத –
நீண்டதொரு நன்றிக்கான ‘அம்மா’ ‘அப்பா’ எனும்
தோற்றுப் போன அழைப்பு நிரூபிக்கிறது
அவர்கள் வளர்த்த அன்பை!
————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.. and tagged , , , . Bookmark the permalink.

4 Responses to கண்பட்ட இடமெலாம் கவிதை; கவிதை!!

  1. soundar சொல்கிறார்:

    //சுடும் நெருப்பென தகிக்கும்
    வெய்யிலின் வெக்கையில் –
    காற்றினை சூடு கொள்ளைகொண்ட – இறுமாப்பை
    உடைத்தெறிய –
    இலட்சியமின்றி துணிகிறது; மர நிழல்கள்//

    ந்த வரிகள் அருமை…

    Like

  2. Ratha சொல்கிறார்:

    காற்று விளையாடி யுள்ளே –
    இதமாய் எழுதும் தென்றல்
    தன்னை மறந்து எழுதுகிறதொரு, ‘கால கவிதை’

    ஆஹா.. அழகான வரிகள் இயற்கையோடு விளையாடுகிறது…
    யாவும் மறந்து நாமும் இயற்கையின் குழந்தைகளாக ஏங்கும் மனது…:-(

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நல்ல ரசனை உள்ளோரை மன்னிக்கவும் ஒருங்கிய அல்லது ஒத்த ரசனை உள்ளோரை கவரும் போல். நான் எதிர்பார்த்து ரசித்து எழுதிய வரிகள் இவை..

      நன்றிகள் உரித்தாகட்டும்!!

      Like

வித்யாசாகர் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s