பறக்க ஒரு சிறகை கொடு.. 5

தொட எண்ணினால் இனிக்குமோ
பார்த்தால் கவருமோ 
பார்த்த பின் மயக்கமோ
மயங்கினால் சிரிக்குமோ
சிரித்தால் சொர்கமோ
சொர்க்கம் தரையிலோ
நடக்கும் பெண்ணிலோ
பெண்ணென்றால் பூவோ
சுடும் தென்றலோ
சொல்லியடங்கா எல்லையின் விரிவோ
விரிந்த வான் மனமோ
ஆழக் கடல் எண்ணமோ  
என்னெல்லாம் எழுதினேன் –
அவள் எழுதிய என் காகிதத்தை படித்து
மடித்துக் கொண்ட பின் –
ஒற்றை பார்வையின் சிரிப்பில் உதிர்த்தாள் 
அவள் காதலை!
———————————————————————-

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to பறக்க ஒரு சிறகை கொடு.. 5

  1. Tamilparks சொல்கிறார்:

    //ஒற்றை பார்வையின் சிரிப்பில் உதிர்த்தாள்
    அவள் காதலை!//

    ஒ கோ

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      காதல் ஒரு உலகளாவிய உணர்வு, அதன் முகத்தை பார்த்து குறிப்பெடுப்பதும் ரசிப்பதும் தான் என் இப்போதைய வேலை, காதலிப்பதல்ல. வேண்டுமெனில்; என்றோ பார்த்த பார்வைகள், பட்ட வலிகளில்; வரிகள் சில ஒத்துப் போகலாம் தோழர். மிக்க நன்றி!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s