என்னவளே..
இதயம்; சுட்டுப் போட்டவளே
எனை தனிமை நெருப்பில் எரித்தவளே
உயிரில்; பிரிவுத் தீயை இட்டவளே
கொல்லாமலே எனை கொன்றவளே;
காதல் காதலென கைபிடித்தழைத்தவளே
இன்று சாதலுக்கும் சாட்சி நிற்பவளே
சட்டென்று விலகிய சிறு இடைவெளிக்குள்
எனை; வாழும் பிணமாக்கி வைத்தவளே;
வாழ்வின் திருப்பத்தை உன்னில் வைத்தது
என்னில் நிகழ்ந்த தவறு;
கால சுமையின் கனவுகளை எல்லாம்
நீயாய் சுமந்தது நானே செய்த தவறு;
தெரிந்தே உடைக்கும் இதய தச்சன்
நீயே ஆனாயடி, உன் தெருவெல்லாம்
காதல் ஏக்கத் ‘தீ பரவி’ – எனக்காய் நீ ஏங்கும் நேரம்
நான் இல்லாமலும் போவேனடி;
காற்று வெளி மூச்சு பரவி
இதயம் தொட்டாலடி, உன் கால் கொலுசு
சப்தம் ஒரு சேதி சொன்னாலடி,
நீ பார்க்கும் பார்வையில் துளியேனும்
என் தேடலை கொண்டாலடி –
சமாதி உடைத்தேனும் உயிர்ப்பேன்
உனக்காய் மீண்டும் பிறப்பேன் –
காதலால் காதலால் –
உன்னில் நானாய் நிறைவேனடி!!
——————————————————————
வித்யாசாகர்
வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 861,046
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
http://vidhyasaagar.com/2010/06/20/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/
அதென்ன..வித்யாசாகர் ஒருவனுக்கு..ஒருத்தி, குடும்ப வளையம், அப்புறம் நல்லவர்களாக காட்டிக்கொள்ளுதல்..என்பதெல்லம்? இவற்றிற்காகத் தானா வாழ்க்கை? மனிதர்களை மனங்களாய் பார்ப்பது எப்போது..?
இங்கு மனதால் வாழ்பவர்களை விட மனதுள் வாழ்பவர்களே அதிகம். தனக்கு பிடிக்காத வாழ்வை சகித்துக்கொள்ளகூட எதாவது மறு வழயில் அன்பும் அமைதியும் தேவைப்படுகிறது. எவரொருவருக்கு அவை எதன் வடிவில் கிடைத்தாலும் அவரை பொருத்தவரை அது உயர்வானதும் புனிதமானதும் தான். குற்றம் சொல்லும் மனிதர்களுக்குள்ளும் நேசம் தேடும் நெஞ்சம் உண்டு வித்யாசாகர்.
வாழ்த்துக்கள்
LikeLike
//இங்கு மனதால் வாழ்பவர்களை விட; மனதுள் வாழ்பவர்களே அதிகம். தனக்கு பிடிக்காத வாழ்வை சகித்துக்கொள்ள கூட எதாவது மறு வழயில் அன்பும் அமைதியும் தேவைப்படுகிறது. எவரொருவருக்கு அவை எதன் வடிவில் கிடைத்தாலும் அவரை பொருத்தவரை அது உயர்வானதும் புனிதமானதுமும் தான். குற்றம் சொல்லும் மனிதர்களுக்குள்ளும் நேசம் தேடும் நெஞ்சம் உண்டு வித்யாசாகர்.//
ஆம் உமா; இக்கருத்தை பதிவு செய்வதே அக்கவிதையின் நோக்கமானது. எனினும் போதிய தீர்வு காணாதவர்களாகத் தான் எதனுள்ளோ தொலைந்து போகிறோம் உமா. இப்படி சரி என நாம் உணர்கிறோம், அப்படி சமூகத்தில் மனசு மனசாக வாழ்கிறதா என்றால் கேள்விக்குறியே மிச்சமாகிறது என்பதை; இவ்விடம் வலியுறுத்த எண்ணினேன். அதற்கே சற்று காலத்தின் தீர்ப்பிற்கிடையே உங்களின் சிந்தனையும் வலிமை படுத்த தேவை பட்டது. மிக்க நன்றி உமா..
LikeLike