உடைந்த கடவுள் – 13

ம்பது சதவிகிதம்
தள்ளுபடி;

எல்லாமே வெளிநாட்டிலிருந்து
இறக்குமதி செய்த ஆடைகள்;

இரண்டு வாங்கினால்
ஒன்று இனாமாக தரப் படும்;

வேறெங்குமே
கிடைத்திடாத தரம்;

இப்படியெல்லாம் ஏமாற்றித் தான்
விலைபோகிறது –
ஏழைகளின் வியர்வையும் ரத்தமும்!!
————————————————————-

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள் and tagged , , , , . Bookmark the permalink.

2 Responses to உடைந்த கடவுள் – 13

  1. கல்யாணி. K சொல்கிறார்:

    மிக அருமையான கவிதை அண்ணா நம் சிட்டிங்கள்ல எல்லாம் இப்போ இப்படி தான் நடக்குது அண்ணா. அக்கறையான கவிதைக்கு பாராட்டுக்கள்.

    கல்யாணி. K

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி கல்யாணி. நான் முன்னூறு ரூபாய்க்கான பொருளை நானூறு ரூபாய்க்கு வாங்கும் போது கோபம் கொள்வேன்; நானூருக்காக அல்ல, இன்று நான் கொடுத்து ருசி காட்டி விட்டால் நாளை நூறோ ஐம்பதோ சம்பாதிப்பவர்கள் எப்படி வாங்குவார்கள் என்று!

      பண்டிகையின் போது வீட்டாரோடு புத்தாடையும் பொருள்களும் வாங்க செல்கையில், ‘பார்க்கும் இடமெல்லாம் படமெடுத்துக் கொள்ளும் புத்தி; பல பைகளோடு, சமுகத்தின் மீதான ஒரு கோபம் சுமந்த மனதையும், ‘சேர்த்து தூக்கிக் கொண்டே வீடடையும்!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s