வாழ்க்கை
வெங்காயம் போல்
என்றார் யாரோ;
உரிக்க உரிக்க
கண்ணீராம்.
உரிபடுவதேயில்லை
இப்போதெல்லாம்
நிறைய பேரின் வாழ்க்கை;
வெங்காயம் என்று
வாழ்க்கையை சொல்லிக் கொண்டதில்
கண்ணீர் மட்டும் மிட்சம் போல்.
என்னை கேட்டால்
வாழ்க்கை பற்றி கேட்காதீர்கள்
உங்கள் வாழ்க்கையை யாரிடமும் தேடாதீர்கள்
வாழுங்கள் என்பேன்!!
———————————————————-