உடைந்த கடவுள் – 35

ன்றெல்லாம்
சுடுகாட்டில் இருக்கும்
வெட்டியான்களை எல்லாம்
விட்டுவிட்டு
வீட்டிற்கு வந்து என்னை
பேய் தின்று விடுமோ என்றே
பயம் வரும்;

இன்றும் அதே பயம்
வீடு சுற்றி
நாடு சுற்றி
மனசாட்சியை கொன்றுகொண்ட
பேய்களே உலவுகிறது;

சுடுகாடே –
மேல்போல்!!
——————————————–

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

6 Responses to உடைந்த கடவுள் – 35

  1. Antony. S சொல்கிறார்:

    மிக மிக உண்மை வித்யாசாகர். நலம் தானே தோழா?

    Like

  2. வரன் சொல்கிறார்:

    மதிப்புக்குரிய வித்யாசாகர் அவர்களுக்கு உங்கள் பதிவுகளை நான் பார்த்தேன்
    உண்மையாக மனதில் பட்டத்தை எழுதுகிறேன் ..தரமாகவும் கனதியாகவும் உள்ளது
    நன்றிகள் பல உங்களுக்கு வளர்க உங்கள் சேவை
    நன்றி ,வணக்கம்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி சகோதரர் வரன். பெயர் புதிதாக நன்றாக இருக்கிறது; வரன். தங்கள் வாழ்த்தினால் மிகையாய் நிறைவுற்றேன். தங்களை போன்றோரின் சொல்லில் புகழ்ச்சியை காட்டிலும் மனதார்ந்த வாழ்த்து இருப்பதை மனதார உணர்கிறேன். மிக்க நன்றி!

      Like

  3. sarala சொல்கிறார்:

    எப்படி யோசிகிரீர்கள் வித்யா. இது அனைவரின் ஆழமான பயம் . வெளியில் சொல்ல முடியாமல் கோர தாண்டவம் புரிகிறது உள்ளுக்குள். கண்களை உற்று பார்த்தால் தெரியும் அந்த பேய்களின் அடுத்த உணவு நாம் என்று நாங்கள் சொல்ல நினைத்ததை நீங்கள் முதலில் சொல்லிவிடீர்கள் எங்களின் சார்பில்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அப்படித் தான் சரளா அது. எழுதுகோல் எடுக்கும் போதே; உலகின், மொத்த உயிர்களின் சங்கமத்தில் நம்மையும் கரைத்து விட்டால் பிறரின் அசைவுகளும் அதிர்வுகளும் நமக்குள் ஏற்ப்படும்!

      மிக்க நன்றி தோழி!!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s