உடைந்த கடவுள் – 35

ன்றெல்லாம்
சுடுகாட்டில் இருக்கும்
வெட்டியான்களை எல்லாம்
விட்டுவிட்டு
வீட்டிற்கு வந்து என்னை
பேய் தின்று விடுமோ என்றே
பயம் வரும்;

இன்றும் அதே பயம்
வீடு சுற்றி
நாடு சுற்றி
மனசாட்சியை கொன்றுகொண்ட
பேய்களே உலவுகிறது;

சுடுகாடே –
மேல்போல்!!
——————————————–

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

6 Responses to உடைந்த கடவுள் – 35

  1. Antony. S சொல்கிறார்:

    மிக மிக உண்மை வித்யாசாகர். நலம் தானே தோழா?

    Like

  2. வரன் சொல்கிறார்:

    மதிப்புக்குரிய வித்யாசாகர் அவர்களுக்கு உங்கள் பதிவுகளை நான் பார்த்தேன்
    உண்மையாக மனதில் பட்டத்தை எழுதுகிறேன் ..தரமாகவும் கனதியாகவும் உள்ளது
    நன்றிகள் பல உங்களுக்கு வளர்க உங்கள் சேவை
    நன்றி ,வணக்கம்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி சகோதரர் வரன். பெயர் புதிதாக நன்றாக இருக்கிறது; வரன். தங்கள் வாழ்த்தினால் மிகையாய் நிறைவுற்றேன். தங்களை போன்றோரின் சொல்லில் புகழ்ச்சியை காட்டிலும் மனதார்ந்த வாழ்த்து இருப்பதை மனதார உணர்கிறேன். மிக்க நன்றி!

      Like

  3. sarala சொல்கிறார்:

    எப்படி யோசிகிரீர்கள் வித்யா. இது அனைவரின் ஆழமான பயம் . வெளியில் சொல்ல முடியாமல் கோர தாண்டவம் புரிகிறது உள்ளுக்குள். கண்களை உற்று பார்த்தால் தெரியும் அந்த பேய்களின் அடுத்த உணவு நாம் என்று நாங்கள் சொல்ல நினைத்ததை நீங்கள் முதலில் சொல்லிவிடீர்கள் எங்களின் சார்பில்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அப்படித் தான் சரளா அது. எழுதுகோல் எடுக்கும் போதே; உலகின், மொத்த உயிர்களின் சங்கமத்தில் நம்மையும் கரைத்து விட்டால் பிறரின் அசைவுகளும் அதிர்வுகளும் நமக்குள் ஏற்ப்படும்!

      மிக்க நன்றி தோழி!!

      Like

வரன் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s