ஞானமடா நீயெனக்கு – 58

ன் கால்சட்டை ஈரமானதில்
மண் பூசி வந்து நின்றாய்.

ஐயோயெனப் பதறி
மேல்சட்டையும் மாற்றிவிட்டேன்;

மீண்டும் நீ சென்று
நீரில் மூழ்கி
ஈரமாக வந்து நின்றாய்.

ஈரமாயிற்றே குளிருமோ என்று
அதையும் மாற்றி விட்டேன்

சோறெடுத்து சட்டையிலெல்லாம்
பூசிக் கொண்டாய் –
அதையும் மாற்றி விட்டேன்

அடுத்து மீண்டும் கால் சட்டை
ஈரமானது
அதையும் மாற்றி விட்டேன்

மீண்டும் ஓடி போய்
தண்ணீரில் குதிக்கிறாய் நீ

உன் அப்பா வரும் நேரம் வேறென்று
நினைப்பதற்குள்
வந்து நின்றார் உன் அப்பா;

‘என்ன இது
குழந்தையை இப்படியா
வைத்திருப்பாய் சலி பிடிக்காது,
நாளெல்லாம் என்ன தான் பண்றியோன்னு
அப்படி ஒரு கத்தல்

நீ மெல்ல உள் சென்று
அலமாரியிலிருந்து வேறொரு நல்ல சட்டியை
கொண்டு வந்து என்னிடம் நீட்டுகிறாய்
நான் உன்னையே பார்க்கிறேன்
முறைக்கவில்லை!
————————————————

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s