ஒரு குடைக்குள் வா; உலக தமிழினமே!!

ரு வனத்தில் நான்கைந்து ஆடுகள், உல்லாசமாய் திரிந்து தின்று உறங்கி நிம்மதியாய் வாழ்கிறது. அக்கம்பக்கத்து காடுகளை அடக்கி பிற உயிர்களை கொன்று இன்பமுறும் சிங்கமொன்று அவ்வனத்தின் வழியே வெகு கர்வத்தோடு நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஆர்ப்பரித்தவாறு வருகிறது.

அழகான அவ்வனத்தின் மேனி பசுமை கண்டு மெய்மறந்து அங்கேயே தங்கிவிடும் எண்ணம் கொண்டு ஒரு வியத்தகு இருப்பிடம் நிறுவி, காடெங்கும் கர்ஜித்து, நான் தான் ராஜா வந்திருக்கிறேன் நீங்களெல்லாம் எனக்குக் கீழென நாவினால் பறை முழங்கி திரிகிறது.

அந்த நான்கைந்து ஆடுகள் அதன் கர்ஜனையை தங்களின் ஒற்றுமையால் உடைத்தெறிந்து தன் சுதந்திரம் பாதித்திடாத பலத்தில் சுற்றித் திரிகின்றன. அப்படி ஒரு தினத்தில் அந்த ‘தின்று கொழுத்த சிங்கம் காடு வளைக்க துணிந்து, பசிக்கென மேய்ந்த ஆடுகளை கொல்லத் திட்டம்தீட்டி நாலு கால் பாய்ச்சலில் அந்த ஆடுகளை நெருங்க, நெருங்கிய சிங்கத்தை ஆளுக்கொரு காலாக பிடித்து வனத்தின் எட்டாதூரத்தில் எட்டி வீசியது அந்த நான்கைந்து ஆடுகள்.

தோல்வியும், பொறாமையும், கோபமும், மண் ஆளும் வெறியுமாய் ‘நாக்கில் மனித உயிர் குடிக்கும் ரத்தமென சொட்ட, மீண்டும் அந்த ஆடுகளின் பின் அலைந்ததந்த சிங்கம். சிங்கத்திடம் அண்டி ஒதுங்கி அது போட்ட எச்சில்உணவை தின்று வாழவும் சில தந்திர நரிகள் ஆடுகளின் தோட்டத்திலிருந்து பிரிந்து சிங்கத்திடம் செல்லாமலில்லை.

நரிகள் சேனையானதில் சிங்கம் தன்னை ராஜாவானதாய் எண்ணி, நரிகளின் தந்திர யோசனையில் ஒவ்வொரு ஆட்டினையாக வளைத்து சண்டைக்கிழுத்து, ஒரு கட்டத்தில் காடு கணக்க கர்ஜித்து ‘தான் மீண்டும் சண்டைக்குத் தாயாரென அறிவிப்பு விட்டததந்த கோழை சிங்கம்.

மேலும், வீரத்தோடு நெருங்க இயலா ஒற்றுமை மிகுந்த அந்த ஆடுகளின் கண்களில் மண் தூவி தூவி மிக தந்திரமாக ஒவ்வொரு ஆடுகளையும் தனித் தனியாய் பிரித்து, தனித்து நிற்கையில் தடார் தடாரென கொண்று வீழ்த்தியது.

நாளடைவில், ஒற்றுமை குலைந்து திரிந்த ஆடுகளின் மொத்த கூட்டத்தையும் அழித்து அழித்து ஆடுகளின் அடையாளத்தையே அழிக்க அந்த கோழை சிங்கம் தயாரானது. கடைசி ஆடு மிச்சமிருக்கும் தருவாயிலும், வனத்தின் நடுப்பகுதியில் ஏறி நின்று வெற்றி வெற்றி என்று கூச்சலிட்டு தீவிரவாதத்தை ஒழித்து விட்டோமென்றும், நாங்கள் எல்லாம் வீர சூரர்களென்றும், ஆடுகளை கொன்றது அரச தர்மமென்றும் ஊளையிட்டுக் கொண்டது நேரே நின்று நெஞ்சில் அடிக்க துப்பில்லா சிங்கம்.

ங்கு, சிங்கம் யாராக வேண்டுமாயினும் இருந்துவிட்டு போகட்டும்; ஆடுகளை நாமென்று எண்ணிக் கொள்ளுங்கள். புலி விரட்டிய தமிழச்சியின் பால்குடித்த வழி தோன்றல், சென்ற இடமெல்லாம் வென்ற கூட்டம், கையேந்தி வந்தவர்க்கு வாழை விரித்து படையலிட்ட தானப் பரம்பரை. தனக்கு கீழுள்ளோரை வளர்த்தும் மேலுள்ளோரை மதித்தும் ‘பண்பு குளையாமல் வாழ்ந்த ஒரு பெருமை மிக்க இனம், இன்று எங்கு நிற்கிறது கண்டீரா உலகத்தீரே?

மிழனின் புகழை ஒவ்வொன்றாய் சொன்னால் கட்டுரை போதாது, தமிழன் என்பவன் பிறரை வாழவைப்பவன் என்ற ஒற்றை அர்த்தத்திலிருந்து இன்றும் தாழாத ஒருவனாய் கேட்கிறேன்; உலகின் உடம்பெங்கும் பரவிய வேராய் இருந்தும் ஏன் அழிகிறது நம்மினம்? ஏன் ஆங்காங்கே வதை படுகிறது நம்மினம்? ஏன் ஆங்காங்கே கொண்று குவிக்கப் படுகின்றனர் நம் மக்கள்? என்னாயிற்று நம் புகழெல்லாம்? எங்கே போனது நம் வீரம்? என்ன ஆனேன் நான்.. நீ .. மொத்த தமிழரும் என்று யோசித்தீரா உலக தமிழினமே????

ரு தமிழின குழந்தை வளரும் போதே, உடுத்திய கால் சட்டை உருவி பாலினம் பார்த்து ஆணென்றால் குண்டு வைத்தும் பெண்ணென்றால் கைவைத்தும் செல்கிறார்களாம்.

பத்து பேரில் ஒரு பெண் அழகென்றால் பிடித்து, கேட்க யாரேனும் வந்தால் அவர்களையும் பிடித்து, அழகு நுகர்ந்து, பெண்மை குலைத்து, உயிர்கொன்று, உறுப்பறுத்து, பார்; தீவிரவாதிகளை பிடித்துவிட்டோம் என்று செய்தி போடுகிறார்களாம்.

பசுமை குலையாமல் விளைந்த நிலத்திலிருந்து வந்த இனத்தின் பார்த்து பார்த்து கட்டிய வீடுவரை பிடிங்கிக் கொண்டு, காட்டில் இடம் தந்து ‘போ வேண்டுமெனில் வாழ்ந்து கொள்; உயிரையாவது காத்துக்கொள் என்கிறார்களாம். யாருக்கு யார்வந்து உயிர் பிச்சை போடுவது யோசித்தீரா உலகத்தீரே?

ன்று செம்மொழி ஆனது தமிழரை சற்று திரும்பி பார்க்கிறது உலகம். நாளை மறைக்கப் பட்ட நம் அத்தனை புகழும் வெளிவந்து நம்மை போற்றி நிற்கையில் இழந்த உயிர்களுக்கெல்லாம் இழப்பிற்கான ஈடிணை நம்மால் திருப்பித் தந்திட இயலுமா?

த்தி எடுத்து ஒருவன் வெட்டுகையில், துப்பாக்கி கொண்டு சுடுகையில், பீரங்கி கொண்டு அடிக்கையில் குடும்பத்தோடு தன்னை தன் இனத்தின் விடுதலைக்காய் மாய்ந்துக் கொண்ட மக்கள்; நாளை குதூகலிக்கும் பொழுதுகளுக்காய் முழுதுமாக இல்லாமல் போகும் முன்; இருப்பவர்களை காத்துக்கொள்ளவேணும் சிந்திப்பது நம் கடமையில்லையா? மனிதமில்லையா உலகத்தீரே?

த்தனை உயிர், எவ்வளவு ரத்தம் விட்டு காத்த மண்ணில்; குடில் புகும் பாம்பு போல புகுந்து, கொடிநாட்டி செல்கிறானாம் எவனோ ஒரு வந்தேறி குடியானவன். நீதிபதியிலிருந்து நம் கால்சட்டை வரை, கொஞ்சமேனும் ஒட்டியிருக்கும் தமிழரென்னும் வாசனையை கூட அகற்றி விட போகிறானாம் ‘எங்கிருந்தோ வந்து நம்மை இடைசாதி நாமென்றவன்.

இப்படி, தமிழர் வாழ்ந்த அத்தனை அடையாளமும் மறைக்கப் படுகிறது; ஒழிக்கப் படுகிறது; இனி எத்தனை பிரபாகரன்களை வைத்து மீட்டெடுக்கப் போகிறோம் தொலைந்து போகுமந்த ஈழ மண்ணினை, யோசித்தீரா?

றந்த ஒரு வீரனை கூட ‘விடுதலை கனவோடு உறங்கும் வீரமறவர் கூட்டமெங்கள் கூட்டம், எமக்கு மரணமென்பதே இல்லை, எம் வீரர்கள் விடுதலை கனவோடு உறங்குகிறார்கள், சுதந்திர விதைகளை தன் உயிரினால் பயிரிட்டு விட்டு ஓய்வு கொண்டுள்ளார்கள், மீண்டும் சொட்டிய ரத்தமெல்லாம் தமிழராகவே முளைத்து வருவார்கள், அன்று பிறக்கும் ஒரு தனி நாடு. அது கொடுக்கும் ஈழத்தின் முழு விடுதலையையும் என்று சொல்லி, கனவுகளோடு கட்டி வைத்திருந்த துயிலம் கூட (மாவீரர்களின் சமாதிகள் வைத்திருந்த இடம்) இன்று தகர்த்து நொறுக்கி அகற்றப் பட்டிருக்கிறதே ஈழத்தில். ‘நெஞ்சு பதைக்கவில்லையா?

நான்கு குழந்தைகள் இருக்கிறதா இரண்டை பிடி, இரண்டு இருக்கிறதா ஒன்றை பிடி, ஒன்றே இருந்தாலும் அது எம் விடுதலைக்காய் இருக்கட்டும் இந்தா பிடியென பெற்ற குழந்தைகளை எல்லாம் அனுப்பி அனாதையாய் வாழும் ‘அந்த தமிழச்சி வயிற்றிலெல்லாம் நெருப்பெரிகிறதே அதை எது கொண்டு அணைப்பீர் உலக தமிழினமே?

ணவன் இறந்தால் முண்டச்சி, கணவன் வென்றால் மண்ணின் விடுதலை என்று வாழ்ந்த பெண்களுக்கெல்லாம் இனி நம்மால் என்ன நீதி கிடைத்துவிடும் உலக தமிழினமே?

சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் வீட்டில் கொத்தாக குண்டு போட்டு கொத்தாக சிதைந்து போன உடலின் தசைகளை கூட்டி எரித்துவிட்டு ஈழத்துத் தெருவிலெல்லாம் பயித்தியமென அலைந்துக் கொண்டிருக்கும் எத்தனையோ வயோதிக தமிழனுக்கு ‘உலக தமிழராய் நாமென்ன பதில் வைத்திருக்கிறோம் உறவுகளே?

டைசியில், அவன் போனானா நீ போ, அவனும் போயிட்டானா நீ போ, அவளும் போயிட்டாளா இதோ நான் வரேனென்று தன் உயிர்களை துச்சமென வைத்து, அறுபது வருடங்களாக, வீட்டுப் பெண்களெல்லாம் போராடிய ஒரு இனத்தின் சுதந்திரம் உலகத்தின் கண்களில் தோல்வியாக மட்டுமே தெரிவிக்கப் பட்டுள்ளதே என்ன செய்து விட்டோம் உறவுகளே?

ழைத்து வாழ்கிறானே அவனை அழித்து விட்டு அவன் நாடுகளை பிடித்து விடுவோம் என்றா போராடத் துணிந்தான் தமிழன், மாறாக அடிமை தனம் ஒழித்து, இரண்டாம் பட்ச பேதம் உடைத்து, தன் சகோதரிகளின் மார்பில் தொட்டவனை கை முறித்து ஒதுங்கி போ; எங்களை தமிழராய் ஒதுக்கியேனும் வாழவிடு என்று கேட்டது தவறா?

தவறில்லை. ஆனால் நம் தோட்டத்திலிருந்து பிரிந்து சென்ற அந்த நரி போல, நம்மில் இருந்து பிரிந்து சென்றதும், பிரிந்தும் அந்த கோழையோடு சென்று வாலாட்டியதும், நம்மை பற்றி நாமே சொல்லிக்கொடுத்து எதிரியை நம் இனத்தின் அழிப்பு மீது கொடி நாட்ட வைத்ததும், பத்து தலை கொண்ட நம் சக்தியை உடைத்து உடைத்து துளி துளியாய் பிரித்துக் கொண்டதும், நம் தவறுகளை நமக்குள்ளேயே நின்று அகற்றிக் கொள்ளாமல் தூர நின்று பரிகசித்துக் கொண்டதும், நிமிர்ந்து பார்த்து யார் மேலோ காரி உமிழ்வதாய் எண்ணி தன் மேலேயே தானே உமிழ்ந்து கொண்டதும் தவறு. தவறு. தவறில்லையா உலகத் தமிழினமே?

அந்த தவறுகளில் தான் சிதைந்து சுக்குநூறாகி பிரிந்து உடைந்து தொலைந்தே போகிறோம். இன்னும் கூட வென்றுவிட வாய்ப்புகள் நிறைய வைத்திருக்கிறோம். எஞ்சிய ஒரு இனத்தின் மிஞ்சிய உயிர்களையாவது காப்பாற்ற ‘வேறொன்றும் வேண்டாம் நம் உலக தமிழர்களின் ஒட்டுமொத்த ‘ஒற்றுமை’ ஒன்று போதும், உலகை ஒரு சுண்டு விரல் சுட்டிக் காட்டும் வேகத்தில் தமிழரென்னும் இனம் தன்னை வெகு சுலபமாக கம்பீரப் படுத்திக் கொள்ளும்.

ன்றென்றில்லை, என்றுமே நாம் வீரத்திற்காக போர் செய்திருக்கிறோம், வென்றோமென நிருபித்துவிட்டு மண்ணாசை கூட இல்லாமல் எத்தனையோ இடங்களை மண்ணினை நாட்டினை ஒரு கொடிநாட்டியதோடு விட்டுவந்திருக்கிறோம். மண்ணிற்கு; மனிதனை தாண்டி ‘ஆசை கொள்ளாதவன் தமிழன், என்பதற்கான வரலாற்றுக் நிகழ்வுகள் நிறையவே உள்ளன.

னியும், நாம் பிறரின் மண்ணோ, பிறரை துன்புறுத்தும் எண்ணமோ கொள்ளப் போவதில்லை. யாரையும் அடிமையாக்கி அவன் தலைமேல் ஏறி நின்று ஆட்சி முழங்கவோ நமக்கு ஆசை இல்லை. ஆனால் தன் அடிப்படை உரிமைக்கு போராடிய தன்னின மக்களுக்காய் ஒரு சின்ன குரல் கொடுப்போமே;

சுற்றி நிற்கும் பத்து நூறு ஆயிரம் கோடான கோடி பேரும் சேர்ந்து ஒரு ஒற்றை குரலை நம் மக்களுக்காய் கொடுப்போமே; தன்னை இணைத்துக் கொண்ட ஒரு குடையின் கீழ் ‘நம்மை அழிக்கத் துணிபவரின் பயத்தை சற்று உலகிற்கு நடுங்க நடுங்க காட்டுவோமே;

காலம் காலமாய் வளர்த்த நம் வீரம் பண்பு பாரம்பரியமென நம் அத்தனை கொடையின் துண்டிப்பும் ஒரு கற்றை நூலிழையில் அறுபடும் இந்நிலையிலாவது, ‘நம் மீதமுள்ள அடையாளங்களையாவது, தன் மொழிக்கென உருவாக்கப் போராடிய மக்களின் மிச்சமுள்ள தேசத்தையாவது, இத்தனை வருடங்களாய் உயிர்விட்டு சிந்திய ரத்தக் கரையினை வரலாற்றிலிருந்து பிறர் அகற்றிவிடும் முன் ‘எட்டிப் அதை பிடித்துக் கொள்வோமே? அந்த நான்கு ஆடுகளின் ஒற்றுமையை மீண்டும் கொண்டு ‘தமிழ் என்னும் ஒரு குடையின் கீழ் தமிழர் என்னும் ஒற்றை பலமாய் மீண்டும் சேர்ந்து நிர்ப்போமே உறவுகளே???

றந்த; இறக்க இருக்கும் அத்தனை லட்ச உயிர்களின் கதறல்களுக்கும் செவி சாய்ப்பீர்களா? என்று கேட்கமட்டும் இதை எழுதவில்லை. செவி சாயுங்கள், சிந்தியுங்கள், எதையேனும் செய்ய துடித்தெழுங்கள் என்று கேட்கிறேன்.

தமிழுலகின் மைந்தர்களாகிய நாம், நம் பிடியில் இருக்கும் ஒரு துளி தயக்கத்தை துச்சமென உடைத்தெரிந்துவிட்டு அடுத்த அடியை எடுத்து வைக்கையில்; நமக்கான நீதியை இவ் உலகம் கொடுக்காமலா போகும்?!!!

ன்னமும் கூட, ஊசலாடும் உயிரை இழுத்துப் பிடித்து, வெறிக்க வெறிக்க தன்னிரு விழிகளை திறந்து, நமக்கென மலரப் போகும் ஒரு தேசத்தின் மலர்ச்சியை, தான் அடைந்து விட்ட சுதந்திரத்தை, இத்தனை வருடம் காத்திருந்த ஓர் விடுதலையை காண ‘விடப் போகும் உயிரை கூட இழுத்துப் பிடித்துக் கொண்டு அடிமைகளுக்கு நிகராய் உயிர்பயம் அறுத்துக்கொண்டு வாழும் சொற்ப மக்களுக்காகவாவது ஒன்று கூடுவோம்; வாருங்கள் உயர் உலக தமிழினமே!!
————————————————————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்வியல் கட்டுரைகள்! and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

28 Responses to ஒரு குடைக்குள் வா; உலக தமிழினமே!!

  1. Ratha சொல்கிறார்:

    உங்களுடைய கட்டுரை ‘Tamilwin’ இல் வந்துள்ளது
    http://www.tamilwin.com/view.php?2a36QVF4b42N988e4b46IP5ce2bf1GU2cd3GipD4e0dTZLu0ce03g2FZ0cd3tjoCd0

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி ராதா. பார்த்தேன். கருத்து நாலு பேருக்கு சென்றடையுமெனில், ஏதேனும் ஒரு நல்லமுடிவோடு மொத்த தமிழர்களும் விழித்தெழுவார்களெனில், அதற்கு இதுபோன்ற கட்டுரைகள் சிறு விதையாகவாவது இருக்குமெனில் நல்லது தான்!

      Like

  2. Senthivelraj Srirajasingam சொல்கிறார்:

    உறங்கும் பல உள்ளங்களைத் தட்டி எழுப்பக் கூடிய உன்னதமான கட்டுரை, இன்றைய நிலையில் அவசியம் தேவையான ஒரு விடயம் தமிழ் ஒற்றுமையே..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆங்காங்கு தனியே நின்று உணர்வுகளால் பொங்கியெழும் கூட்டங்களை திரட்டி சிந்திக்க சொல்வதே இக்கட்டுரை எழுதியிருப்பதன் நோக்கம்.

      முன்பை விட தற்போது நல்ல விழிப்பு இருந்தும், செயல்பாடு இல்லை, அல்லது என்ன செய்வதென்ற வழி பிறக்கவோ, தேடவோ, தேடுதலை ஏற்படுத்தவோ ‘தனியொரு ஆளாக முடிவதில்லை. எனவே, ஒற்றுமையாக ஒருங்கி நின்று எஞ்சியிருக்கும் மக்களுக்காவது ஏதேனும் செய்ய இயலுமா என்று சிந்திக்கவே இக்கட்டுரை இத்தனை தூரம் நீண்டிருக்கிறது.

      அதுதவிர, எத்தனயோ வேதனைகளை, வலிக்க வலிக்க அனுபவித்த எம் மக்களின் வலியை சற்றேனும், தெரியாதோருக்கு தெரிவித்து, பொங்கியெழும் உணர்வின் அதிர்விலாவது, ஒரு வழி ஏற்பட்டுவிடாதா என்பதே என் எதிர்பார்ப்பு. மிக்க நன்றி தங்களின் புரிதலுக்கு!

      Like

  3. Renuka சொல்கிறார்:

    மிகச்சிறந்த கட்டுரை வித்யாசாகர். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
    வாழ்த்துக்களுடன் றேனுகா

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அன்பு சகோதரிக்கு, இம்மறுமொழி தாண்டி, இன்னும் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டிய நிறைய தருணத்தை வைத்திருப்பீர்களென்று அறிந்தாலும்… மீண்டும் மீண்டும் நன்றி சொல்லவே காத்திருக்கிறேன்.

      எனக்கான கடமை எழுதுவதோடு நின்று விடுகிறது பெரும்பாலும்; அதை உலகின் மூலைக்கும் கொண்டு சேர்க்கும் பெருமை உங்களைப் போன்றோரையே சேர்கிறது றேனுகா. நம்மால் இயன்றதை செய்வோம், மேலே, இறைவனால் என்ன நடக்க உள்ளதோ அது நடக்கட்டும், என்று சொல்லவும் ஏனோ மனம் மறுக்கிறது, காரணம், என்ன நியதியோ இருந்துபோகட்டும், வீழ்ந்த எத்தனை குழந்தைகளையோ உயிர்களையோ எந்த சக்தியுமே காக்காமல் தானே போனது.

      இனி எஞ்சியுள்ளர்வர்களையாவது நம் ஒற்றுமை சக்தி காக்கட்டும்!

      Like

  4. Senthivelraj Srirajasingam சொல்கிறார்:

    நன்றி உங்களுக்கே, நான் இக்கட்டுரையைப் படித்தது தமிழ் வின் இணையத்தில். நல்லதொரு அணுகுமுறையுடன் தமிழரின் அவலநிலை எடுத்துரைக்கப்பட்டுள்ளது, தொடருங்கள் உங்கள் பணியை நண்பரே..

    Like

  5. Thavaraasa Suganthan சொல்கிறார்:

    வணக்கம்.உங்களது கட்டுரை சிறப்பாக உள்ளது. உறக்க நிலையிலுள்ள தமிழனை நிச்சயம் தட்டும் என்பதில் ஐயமில்லை. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி சுகுந்தன், என்னால் இல்லாவிட்டாலும், மறுமொழிகளால் தன் உண்மையான உணர்வுகளை காட்டும் தங்களை போன்றோரால் கண்டிப்பாக மொத்த தமிழர்களின் மனதும் நமக்காய் திறந்து வரும்!

      Like

  6. Oru vaasagi சொல்கிறார்:

    ஒரு குடைக்குள் வா உலக தமிழினமே..

    வருமா வித்யாசாகர்? இதை வாசிகேக்கை எங்கட தேவை என்னண்டு தெரியுது. ஆனால் இந்த தமிழினம் தன் சாபக் கேட்டிலிருந்து விடுபட்டு வெளில வருமா? உங்களடை ஆவலும், உணர்வுள்ள எல்லாம் தமிழனின் விருப்பமும் நிறைவேறுமா? ஆய்வு அறிக்கை எண்டு ஒருத்தருக்கொருத்தர் மேலே சேரடிச்சண்டு இருக்கிற அறிவு ஜீவியளின்ரை பேனாக்கள் இன்று ஊமையாகினாலே போதும்; இந்த சமுதாயாதின்ரை பெரும் தடை ஒண்டு தானாகவே நீங்கும். எல்லோரும் சேர்ந்து நீங்கள் சொல்லுறதை சொன்னாலே ‘எங்கடை ஒற்றுமைக்கு இருக்கிற முதல் தடை நீங்கிடும். தொடர்ந்து இப்படியான ஆரோக்கியமான தேவையான விடையங்களை எழுதுங்கள். என் இனிய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் உங்களுக்கு..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      என் அன்பு சகோதரிக்கு,

      கண்டிப்பாக வரும் சகோதரி. என் படைப்புகளின் நோக்கம் ஒரு அடிப்பட்ட புண்ணுக்கு மருந்திடுவதல்ல, மீண்டும் அடிப் பட்டுவிட வேண்டாமே என்பது மட்டுமே. அது தவிர, இது ஒரு இழப்பு கண்டு கண்ணீர் சிந்தும் கரிசனமில்லையா.

      இன்னும் சில நாட்களில் மாதங்களில், வருடங்களை விழுங்கிய பின், ஈழத்தில் வாழ்ந்த தமிழர் பற்றிய அத்தனை அடையாளங்களும் மறக்கடிக்கப் பட்டுவிடக் கூடாதில்லையா. பிறகு தமிழன் வாழ்ந்தான் என்ற கதை மட்டுமே மிஞ்சவேண்டாமில்லையா. எனவே தான் இயன்றதை செய்வோமென்ற முயற்சி இது. நம்மை நிறைய பேர் இணையத்தில் படிக்கிறார்கள் என்பதால் இதுபோன்ற சிந்தனைக்கு ஒரு வழியை நம்மாலும் ஏற்படுத்தித் தருவோமே என்ற நோக்கம் தான் ஈழம் சார்ந்த என் கட்டுரைகளும் கவிதைகளும்.

      அது உண்மைகளை பதிவு செய்யும் விதமாய் இயன்றவரை தொடரவே செய்யும். பார்ப்போம் நம் மக்களுக்கான விடிவு நியதியின் தீர்வு படி நல்லதாகவே வரட்டும் என்னும் மன அதிர்வை மட்டும் எல்லோரும் கொள்வோம், அவசியமேற்படின் ஒருங்கிணைந்து நம் ஒற்றுமையை பறைசாற்றுவோம். நடப்பதும் நடக்காததும் அவன் செயல் என்று ஒதுங்கி நின்று விட இயலவில்லை. நல்லது மட்டுமே நடக்குமென நம்புவோம் சகோதரி!

      உங்களுக்கு தர; மன ஆறுதலை தவிர என்னிடம் வேறொன்ருமில்லை… மன்னியுங்கள்..

      Like

  7. Tamilparks சொல்கிறார்:

    மிகவும் பயனுள்ள கட்டுரை, பகிர்வுக்கு நன்றி

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி தமிழ்த்தோட்டம். இக்கட்டுரை எல்லாராலும் வாசிக்கப் படுமா, அதும் முழுமையாக வாசிக்கப் படுமா, எல்லோரையும் சென்றடையுமா என்றெல்லாம் யோசித்து எழுதியப் பின்னும் சில நாளாக பதியாமலே வைத்திருந்தேன். கடைசியாக, காலத்தின் ஒருதேவையாக கருதியே இங்கு பதிய முனைந்தேன். இன்னும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒருவேளை எந்த முடிவும் நம்மால் எடுக்கமுடியாமலே போகுமெனில், நாளைய வந்தேறியின் கொட்டத்தை அடக்க, அடக்க ஏன் ‘அடக்குவதை கடந்து அடங்கிப் போவதற்கே வழி மிஞ்சலாம்!

      Like

  8. kovai mu. saraladevi சொல்கிறார்:

    ஒரு காட்டை எரிக்கும் வலிமை தீக்குச்சிக்கு உண்டு அந்த தீபொரியை உங்கள் வரிகளில் கான முடிகிறது.

    தமிழ் தாய் பெற்றெடுத்த தமிழ் மகன் நீங்கள். எல்லோருக்குமே இந்த கொந்தளிப்பு இருக்கிறது. கொஞ்சம் வெளிகாட்டினாலும் நம்மில் இருந்து பிரித்து தனியாக சிறைபிடித்து சித்திரவதை செய்ய நிறைய நரிகள் இருக்கிறது என்ற அச்சம்.

    ஆனால் அதை வெளி காட்டிய உங்கள் உணர்வுகள் எங்களுக்குள் பெரும் அதிர்வை உருவாக்குகிறது. துடித்துக்கொண்டு தான் இருக்கிறோம் நம் இன மக்களின் கதறல்கள் காதுகளில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. எஞ்சியிருபவர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என இரத்தம் துடிக்குது சரியான வழிகாட்டுதல் இல்லையே? முன் வந்து ஒருவர் குரல் கொடுத்தால் அவரை பின் தொடர தயாராக தான் இருக்கிறோம். கண் முன்னாள் சகோதரியின் கற்பு சூறையாடப்பட்டு சிதைக்கபடுவதை கண்டு இன்னும் உயிருக்கு அஞ்சி ஒதுங்கி இருப்பதை நினைக்கையில் வெட்கப்பட்டு வேதனை படுகிறோம். என் செய்வது என அறியாமல் தான் அஞ்சி இருக்கிறோம். உங்கள் வார்த்தைகளில் காணப்படும் வலியை நாங்களும் உணர்ந்துகொண்டு தான் இருக்கிறோம். வலி உணராதவர்களுக்கு வலி உணர்த்துகிறது உங்கள் வார்த்தைகள்.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி சரளா. எல்லோருக்குமே எல்லாமுமே உண்டு. ஆனால் தனித்தனியே நின்று சிந்திப்பதால் தீர்வின்றி இருக்கிறோம். எல்லோரும் ஒருங்கிய சிந்தனையோடு ஒன்றுபட்டால் நம் ஒற்றுமை நல்ல தீர்ப்பினை அம்மக்களுக்குத் தந்திடாதா என்பதான ஏக்கமான வேண்டுகோளே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

      தமிழன் தன் இனத்திற்காய் என்றோ சிந்திக்க ஆரம்பித்துவிட்டான். ஆனால் இனி எங்ஙனம் செயல்படுவது. என்ன செய்வது. யாரையும் எதிர்பாராமல் நானே முன்வந்து நின்றாலென்ன, என்னால் இனி என்ன செய்திட இயலும், இயன்றதையாவது நான் செய்ய இயலுமா என எல்லோருமே சிந்திக்கவும் உடனே செயல்படவும் வேண்டுமென்பதே அவசியமென்னும் நிலையில் இருக்கிறோம் சரளா.

      உலக தமிழர்களான நம் கையில்; பாதுகாக்க இன்னும் நிறைய தமிழர்களின் உயிர் மிச்சம் இருக்கிறது!

      Like

  9. revathasan சொல்கிறார்:

    வித்யா சாகர் ,

    அருமை. ஒன்றாக வேண்டியதன் தேவையை தெளிவாக சொல்லியுள்ளீர்கள். ஆனால் தனி தனியே நிற்கும் மக்களை எவ்வாறு இணைப்பது. சற்று சிரமம் தான். செய்யத்தான் வேண்டும் கட்டாயம். உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்க வேண்டும். அதன் மூலம் நமது சகோதர்களை உய்விக்க வேண்டும்.

    அதே போல் வெட்டி ஆய்வு செய்யும் மக்களும், காசுக்காக காட்டி கொடுக்கும் பெரிய மனிதர்களையும், தங்களது பண பதவி ஆசைகளுக்கு மக்களை காவு கொடுக்கும் அரசியல் வியாதிகளையும் மீறி நம் நகர்வுகள் அமைய வேண்டும். இதற்கு முயற்சிக்க வேண்டும்,

    ஒரு வேண்டுகோள் உங்கள் கட்டுரையை எனது ப்ளாக் ல் மறு பதிப்பு செய்ய அனுமதிக்க வேண்டும்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      தாராளமாக செய்யுங்கள். மகிழ்வேன். எழுதியது எதையும் தக்கவைத்துக் கொள்வதற்கில்லை. இன்னும் சிந்திக்க செய்யவும், தவிர மேலும் சிந்தித்து ஒரு தீர்வினை காணவுமே என்பதால், எங்கெங்கு வேண்டுமோ பிரசுரித்து உலக தமிழர்களால் ஒரு முடிவை எடுக்க உதவுங்கள். உங்களின் உதவியால் எஞ்சிய உயிர்களாவது நிம்மதியும் சமாதானமும் கொள்ளட்டும்…

      மிக்க நன்றிகள் உரித்தாகட்டும்.. உறவே!!

      Like

  10. Siva Pillai சொல்கிறார்:

    //கையேந்தி வந்தவர்க்கு வாழை விரித்து படையலிட்ட தானப் பரம்பரை. தனக்கு கீழுள்ளோரை வளர்த்தும் மேலுள்ளோரை மதித்தும் ‘பண்பு குளையாமல் வாழ்ந்த ஒரு பெருமை மிக்க இனம், இன்று எங்கு நிற்கிறது கண்டீரா உலகத்தீரே? // இதுதான் தமிழன் பண்பாடு. அழகாகக் கூறியிருக்கிறீர்கள்.

    இனிமேலாவது ஒரு குடையின் கீழ் வருவானா? உங்கள் எண்ணம் கட்டாயம் கிட்டும்.

    Like

  11. வித்யாசாகர் சொல்கிறார்:

    எழுச்சிமிகு இந்த ஒரு பாடல், விடுதலைக்காய் இயங்கிய ஒவ்வொரு சுதந்திரப் போராளிகளையும், பட்ட அவதிகளையும், கண்ணியத் தலைவனையும் ஒருவாகப் படம் பிடித்துக் கொண்டுள்ளது…

    மிக்க நன்றிகளுடன்..

    வித்யாசாகர்

    Like

  12. C.Rajarajacholan சொல்கிறார்:

    மிகவும் பயனுள்ள கட்டுரை அண்ணா..

    Like

  13. C.Rajarajacholan சொல்கிறார்:

    தலைப்பே ஒரு கவிதை போல இருந்தாலும், படிக்கும் ஒவ்வொரு வரிகளும் படிப்பவரை துடித்தெழச் செய்யும் என்பது உறுதி. மிக மிக உயர்வான சிந்தனைகள் அடங்கியுள்ள மிக நல்ல கட்டுரையை அளித்ததற்கு மிக்க நன்றி அண்ணா…

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி… நாலு பேர் செய்வது சண்டை என்றாகலாம், நாற்பது பேர் சேர்ந்தால் ஏதோ போராட்டமென்றும் ஆகலாம், நாலாயிரம் நான்கு லட்சம் நான்கு கோடியாக களம் இறங்குவோம், நீதிக்காக போராடுவதை உலகிற்கு அறிவிப்போம், இளைஞர்கள் ஒன்று திரண்டால்நடக்காதது ஒன்ருமேயில்லைப்பா….

      Like

  14. இலங்கை வாசகன் சொல்கிறார்:

    அன்புள்ள நண்பர் வித்யாசாகர் அவர்கட்கு,

    உங்கள் இந்தக் கட்டுரையை தமிழ்வின் இல் பார்த்தேன், என் மனதில் உள்ளதை உங்கள் எழுத்தில் பார்த்ததும், தமிழனை விழிக்க செய்ய ஒரு நிஜ தமிழன் இருக்கிறான் என்று தான் தோன்றியது.

    உண்மையில் பெருமை படுகின்றேன் உங்களை நினைத்து, எம் மக்களுக்கு எது இப்போது தேவை என்று புரியவில்லை, எம் சொத்துகளை நாசமாக்கி, எம் உறவுகளை கொன்று, தற்போது எமக்கு உதவுவதாக சர்வதேசங்களுக்கு காட்டிக்கொண்டு தரும் இலவசங்களை பெரிதாக நினைகின்றார்கள் நம் மக்கள். சில கொடுமைகளை பொறுக்க முடியவில்லை, வெளியில் சொல்லவோ காட்டவோ முடியவில்லை, மனம் மிகவும் கொதிக்கும், ஆனால் இலங்கையில் இருந்துக் கொண்டு என்னால் என்ன பண்ண முடியும்?

    Like

  15. வித்யாசாகர் சொல்கிறார்:

    பெரு அன்பிற்குரிய தோழருக்கு, உலகம் முழுதும் தமிழர்கள் துடிப்போடு தான் இருக்கிறார்கள். ஆனால் தன் துடிப்பை உரித்தவாறு செயலாக்கிக் கொள்ள வழி கோரா அரசாக தமிழன் வாழும் இடமெல்லாம் அவ்விடத்தின் அரசே முட்டுக் கட்டையாக உள்ளது. இது ஒரு நாடு சார்ந்த செயல்பாடு என்பதால் தனி மனிதனால் சாதிக்க ஒன்றும் முடியாதவானாகவே உலக தமிழர்கள் நொந்து போவதை நமக்கு வரும் மின்னஞ்vசல்கள் மறுமொழிகளில் அரிய முடிகிறது.

    யாரையும் பழிக்கும் அல்லது முற்றிலும் அழிக்கும் நோக்கமோ, ஒற்றுமையை குலைக்கும் எண்ணம் எல்லாம் நமக்கில்லை. ஆனால் நம்மை மதிக்க முடியாத அழிக்க துணிந்த ஒருவன் கீழ் வாழ்வதென்பது மிகக் கடினம். அதிலிருந்து விடுபட்டு தன் மண்ணில் தனதான வாழ்க்கையை வாழவும், அதற்கான உணர்வுகளை வெளிப்படுத்தி தன் தேவைக்காக குரல் கொடுக்க கேட்பதே என் கட்டுரைக்கான கெஞ்சல்.

    உலகின் பார்வையில் ஈழத்து மக்களின் கதறலும் வலியும் தெரியாமல் இல்லை. விரைவில் ஏதேனும் நடந்தேற தக்க அதிர்வுகளை ஏற்படுத்தும் உணர்வை மட்டும் நமக்குள் மிகையாக தக்கவைப்போம். நம்பிக்கையோடிருப்போம்..

    நம் வேண்டுதலும் நம்பிக்கையும் ஒற்றுமையும் விரைவில் எம் மக்களுக்கான விடிவை கொடுக்குமென்றே நம்புவோம் தொழர்!

    Like

  16. anandharajan சொல்கிறார்:

    So nice.

    Like

பின்னூட்டமொன்றை இடுக