அரைகுடத்தின் நீரலைகள் – 10

றக்கம் சொக்கும்
கண்களுக்குள்
காமத்தையும் கறுத்த இருள் படர்ந்த
இருட்டையும் புகுத்தும்
ஒரு பொழுதாகவே
இரவை எண்ணுகிறது மனசு;

வெற்றியாளனின் உழைப்பில்
இரவும் பகலும்
பெயரற்றுக் கிடக்கிறது!
———————————————–

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அரைகுடத்தின் நீரலைகள் – 10

  1. கோவை கவி சொல்கிறார்:

    //வெற்றியாளனின் உழைப்பில்
    இரவும் பகலும்
    பெயரற்றுக் கிடக்கிறது//

    இது மிகப்பெரிய உண்மை சகோதரரே!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அரைகுடத்தின் நீரலைகள்’ எல்லோரையும் சென்றடையுமா என்ற ஒரு பயம் எழுகிறது சகோதரி. இந்த பயத்தில் தான் மரபு கவிதைகளின் கரம் தவிர்த்தேன். ஒரு சாமானியனுக்குப் புரிவதே, ஒரு சாமானியனை சென்றடைவதே படைப்பு; அதற்கே இலக்கியத்தின் தேவையும், என்பது என் எண்ணம், என்றாலும், இதை ஒரு அவசியமான பதிவுகளாக கருதியும், மெல்ல எல்லோரையும் சென்றடையும் என்று நம்பியும், உங்களை போல் சகோதரிகளும் உறவுகளும் இருக்கவே செய்கிறீர்கள் என்ற அன்பின் மெச்சுதலிலும், நன்றிகளுடன் மேல் செல்கிறேன் சகோதரி.

      நானெல்லாம் எப்பொழுது விழிக்கிறேன்,எப்பொழுது எழுகிறேன் என்றே தெரியவில்லை. ஒரு பெரிய நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டுத் துரையின் பொறுப்பும், இடையே சமுகத்தின் விழிப்பிற்கான தேடலும், எழுத்தும், உறவுகளும் இதர அனைத்துமாய் நாட்கள் கண்சொடுக்கினாற்போல் கடக்கிறது, எனக்கெங்கே இரவும் பகலும்???!!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s