வாழ்க்கையை
உலகை
வெற்றிகளை யெல்லாம்
சுண்டி ஒரு விரல் நுனியில்
வைக்க
மனசு போதும் என்று
தெரிந்தோ தெரியாமலோ
உணர்ந்தவர் தான்
முன்னே நிற்கிறார்;
புரியாதவர்கள்
வாயை மூடிக் கொண்டு
மனதை திறப்போம்;
நாளையாவது –
பின்னிருந்து முன் செல்லலாம்!
——————————————