மதம் ஜாதி
ஏன் இனம் கூட
உன்னை தாண்டி பிறரையும்
வளர்க்குமெனில்
வைத்துக் கொள்;
அது உன்னையல்ல
பிறரை
பிறர் உணர்வை
பிறர் வாழ்வை ஒடுக்குமெனில்
உன்னையும் சேர்த்துக் கூட
கொன்று முடி
மதவாதம் ஜாதிவெறி இனவெறி அறு
மனிதம் நிலைக்கும் வரை மட்டுமே
அவைகளில் பற்று கொள்!!
—————————————