சோரூட்டியது போகட்டும்;
உனை கொஞ்சி தலைகோதி
விளையாட அழகு பார்த்தது போகட்டும்;
ஊரெல்லாம் உன் வெற்றியை சொல்லி கொண்டாடி
வாசலெல்லாம் நீ வருவாயா என காத்திருந்தே
வயதை யொழித்த தாயன்பு போகட்டும் –
வேறென்ன தான் வேண்டும் ஒரு தாய் பற்றி சொல்லவெனில்
நம் செல்ல சகோதரி, வார்த்தையின் வீரியக் காரி
கவிதை உச்சரிப்பின் சொல்லழகி திருமதி தேவிரவியை அழைத்து கேட்போம் வாருங்கள் சகோதரி!
—————————————————————————————-