எ ன்ன தான் மனிதன்
செய்தாலும் – மனிதனை
செத்து தொலை என்று
சொல்ல விடுவதேயில்லை மரணம்;
மீறி சிலர் சொல்கிறார்கள்
ஏன்; கொலை கூட செய்கிறார்கள்
மனிதரற்றோர்;
மரணம் அவர்களை
மன்னிப்பதேயில்லை, மாறாக
தினம் தினம் கொள்கிறது,
கடைசி ஓர்நாளில்
அவர்கள் சடலம் மட்டும் எரிக்கவோ புதைக்கவோ
தூக்கி எங்கேனும் வீசவோ செய்யப் படும் நாளில்
அவர்களை இறந்ததாக –
கருதி மட்டுமே கொள்கிறது (அவர்களின்) உடல்!
—————————————————————