1
இரவின் சுவர்களில்
வண்ணமின்றி –
எழுதப் படுகின்றன நம் கனவுகள்..
எவனோ ஒருவன்
வெறும் –
இருட்டென்று சொல்லிவிட்டுப் போகிறானதை..
————————————————————–
2
ஆம்; நிறையப் பேர்
அப்படித் தான் இருக்கிறார்கள்,
நாம் எப்படி வேண்டாமென்று நினைக்கிறோமோ
அப்படி;
காரணம் நாமும் – அப்படியென்பதால்!!
————————————————————–
3
நட்பினால் –
பெரிய தேச மாற்றம் எல்லாம் வேண்டாம்;
நம் அருகாமை நண்பனை
முதலில் காப்போம்;
அவனிலிருந்து துவங்கும் – நம்
தேசமாற்றம்!!
————————————————————–
4
விடியலின் அலாதியில்
ஈரம் சேர்த்த கொடூரங்களால்
சமூகத்தை குற்றவாலியெனக் கூறி
தேடி அலைகிறது மனசு..
கள்ளச் சமூகம்;
மனசிடம் பிடிபடுவதே இல்லை!!
————————————————————–
5
காலையில்
ஒரு பூ பூத்த மலர்ச்சியில்
கண்விழித்தாலும் –
கண்ணீராய் சொட்டுகிறது
வாழ்வின் அலங்கோலங்கள்..
—————————————————————
6
நட்பினால் ஒரு
ஒற்றுமை சமுதாயத்தை பிறப்பிப்போம்.
ஒற்றுமை நமக்கு
விடுதலையின் தடத்தை
நிதர்சனமித்துக் காண்பிக்கும்..
—————————————————————
7
மனிதரில்
நூறு வகை இருக்கட்டும்;
தமிழரில் –
ஒருவகை போதும்;
ஒற்றுமைச் சுவற்றின்
மேலே நிற்கும் ஒற்றை தமிழன்
அந்த –
நூறு வகை மனிதர்களுக்குச் சமம்!!
—————————————————————
8
என்னதான் அவசரமென்று ஓடினாலும்
மனசு மட்டும் –
தனக்கான பல இதயங்களை
தூக்கிக் கொண்டு தான் ஓடுகிறது..
—————————————————————
9
எதையோ –
எடுத்து வைத்துக் கொண்டு
ஏதோ ஒன்றினை தருவதில்;
பெறுவதில்;
எப்படியோ – நிறைந்தே விடுகிறோம்..
—————————————————————
10
நம் வீட்டைச் சுற்றித் தான்
கிடக்கின்றன; கவிதைகள்;
எழுதுகோல்தான் பாவம்
எங்கெங்கோ அலைகிறது மனசுபோல
கவிதை தேடி!!
—————————————————————
வித்யாசாகர்
மிக மிக நன்று வித்யாசாகர்.
LikeLike
வெகுநாட்களாக தங்களை காணவில்லையே. விடுறையில் ஏதேனும் இருந்தீர்களா? தங்கள் வரவு மகிழ்விற்குரியது…
கவிதையின் மெச்சுதலுக்கு நன்றி உமா..
LikeLike
மனிதரில்
நூறு வகை இருக்கட்டும்;
தமிழரில் –
ஒருவகை போதும்.
மனதை தொட்டு விட்டது
LikeLike
இன்னும் நிறைய பேரை தொடவேண்டும்……………..
மெல்ல சேர்ந்துவருகிறோமில்லையா; இனி தொட்டுவிடுவோம்!!
LikeLike