உச்சிவெயில் எனை எரிக்கும் சூட்டை
உன் ஒற்றை பார்வை தனித்ததடி
நாளையும் வந்து இங்கே நிற்பேன் –
நீ வந்தால் வாழ்க்கை சொர்கமடி!
சற்று களைந்து சிலிர்ப்பும் உன் அடர்கூந்தல்
காற்றில் பறக்கும் என் இதயமடி –
காடு போல் பரந்துகிடக்கும் என் இதயதெருவில்
நீ மட்டுமே வீற்றிருக்கும் தேவியடி!
நெற்றி சுருக்கி நீ பார்த்தாய் பார்த்தாய்
ஆகா.. உள்ளே ஒரு பிரபஞ்சம் உடைந்ததை கண்டேனடி
இனி ஏழு பிறப்பு உண்டோ இல்லையோ
உனக்காய் உனக்காய் மட்டுமே நான் பிறப்பேனடி!
நடந்து வரும் தேவதை போல் – நீ
கை வீசி வீசி காற்றில் கலந்தாயடி
என் சுவாசம் பிரித்து பார்த்தால் கூட
அதில் உயிர்காற்றாய் நீயே இருப்பாயடி!
எனை தொடாத தென்றல் நீயே
தொட்டுசெல் ஓர்முறை – இதய தாளத்தில் ஆடி திளைப்பேனடி
விட்டுசெல்லும் ஓர் முடிவு – உண்டென்றால்
அதை சொல்லாமலே செல் –
உன் ஒற்றை பார்வையிலேயே உயிர்த்துக் கிடப்பேனடி!!
—————————————————————
வித்யாசாகர்
ஒவ்வொரு வரியும் ரசிக்க வைக்கிறது. மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே இருக்கிறேன் …கவிதை வரிகளிலேயே மூழ்கி விட்டது மனம்
இது ஒரு திரைப்பட பாடலுக்காக எழுதியது கல்யாணி, என்னவோ பதியனும் போல் இருந்தது பதிந்து விட்டேன். அவரகள் வலைதலத்திளிட்டது கண்டு எடுக்காவிட்டால் வேறு எழுதிக் கொள்வோம்..
தெருவில் ஒரு பெண் வருகிறாள்; அவளுக்காக காத்திருக்கும் காதலன் அவளை பார்த்து பாடுவதாக’ பாடல் எழுதப் பட்டுள்ளது!
உங்களுக்கெல்லாம் பிடித்ததில் மகிழ்ந்தேன்!!
silaruku katalikumpothu nalla kavithai varum
silarku katalil tholviuttral nalla kavithai varum
silaruku time kidacha kavitahi varum
vidya neenga lover illa,devadasum illa,summaum illa
kuwait la pamparama suthikite atum kudumpathoda
neenga elutara kavitaiellam ninichi santosama iruku
ungala mari ennalla spent panna mudila enrta athangamum irku
nandri
lakshminathan
எல்லாம்……… நீங்கள் அழைக்கும் அந்த வித்யா எனும் பெயருக்குள் எனக்காய் பதுக்கி வைத்திருக்கீங்களே; அந்த அன்பு தான் காரணம் லக்ஷ்மி!! மிக்க மிக்க நன்றியானேன்!!
நல்ல வரிகள் வாசிக்க இதமான கவித்துவ வரிகள் வாழ்த்துகள். வாழ்த்துகள! நேரமில்லையென்று கூறாமல் வேதாவின் வலையையும் சற்று எட்டிப் பாருங்களேன்.
http://kovaikkavi.wordpress.com/ nanry.
மிக்க நன்றி சகோதரி.. நிச்சயம் வருகிறேன். உங்களை எல்லாம் சந்திக்காமல் வேறு யாருக்காக இருக்கிறது நேரம் சகோதரி..
மிக்க அழகு வித்யா !! ரசித்தேன் !!!
கவிதை பாடலானால் இன்னும் ருசித்திருக்கும் . தொடர்ந்து தாருங்கள்…..
அபப்டியா. மிக்க மகிழ்ச்சி. இத்தனை வரவேற்பா. அப்போ நிச்சயம் பாடலாக செய்யக் கேட்போம்.. மிக்க நன்றி உங்களின் கருத்துரைக்கு!!
“வரி வரியாய் உணருகிறேன்
ஒரு காதலனின் ஏக்கத்தை”
அருமை வித்யா படித்தேன் என்பதைவிட நனைந்தேன் என்று சொன்னால் பொருந்தமாக இருக்கும் உங்கள் உணர்வுபூர்வமான உயிர்பூர்வமான வார்த்தைகளில் ஊசலாடுகிறது எங்கள் மனம் தொடருங்கள் ……………
நிறைய கவிதைகள் எழுதப் படுகின்றன நிறைய பேருக்காய். அவரவர் அதை புரிந்துக் கொள்ளும் அளவில் அது அவரவருக்குப் பிடித்துவிடுகிறது. ஆனால் கவிதைகள் எழுதப் பட்ட அந்த யாரோவை கடந்தும்; யாரையோ தொட்டுவிடுவதில்; கவிதைகள் அந்த யாரோவிற்காக காத்தே கிடக்கிறது..
மிக்க நன்றி சரளா. வெகு நாட்களுக்குப் பின்னான வருகை மகிழ்ச்சிக்குரியது!!