38) இது விடுதலைக்கான தீ……..

1
பேச வாயற்று போன இடத்திலிருந்தே
வார்த்தைகள் வீரியமாய் விழுகின்றன;

விழுகின்ற வார்த்தையினால்
கொதிக்கும் ரத்தத்தில் தான் –
மூழ்கிக் கிடக்கிறது; நம் சுதந்திரம்!!
—————————————————————–

2
நா
ம் அணியும்
ஒவ்வொரு சட்டைக்குள்ளும்
நம்மை காக்கும் – மானமும் இருக்குமெனில்

அதற்குள் –
விடுதலையும் இருக்கும்!!
—————————————————————–

3
வெ
ள்ளைக் கொடியில்
விடுதலை எல்லாம் –
இனி வெற்று வாய்க்கு
மெல்ல வெற்றிலை போல்;

உடல் கீறி ஒழுகும்
ரத்தம் நனைத்தேனும்
சிவக்கட்டும் – இனி வெள்ளைக்கொடி!!
—————————————————————–

4
ன் கையில்
நூறு கத்தி கொடுத்து
யாரையேனும் வெட்ட சொல்;
வெட்ட மாட்டேன்.

என் தமிழச்சியை தொட்டால்
கத்தியின்றி
ரத்தமின்றி
வெட்டுவேன்!!

நான் வெட்டிய வலியில்
விடுதலை பிறக்கும்,
விடுதலையை கவிதைகளும் வெல்லும்!!
———————————————-

5
தயத்தை மிதித்துக் கொண்டு
மார்பை ரசித்தவனை –
வெட்டிப் போடாவிட்டாலும்

ஒட்டி வாழாமலுக்கேனும் –
விடுதலை வேண்டும்!!
—————————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s