70) தெருமுனையில்; நின்று பார் போதும்!!

1
நீ
அந்த தெரு வழியே
போனாயென்று எல்லோருக்கும் தெரியும்;
எனை பார்த்தாய் என்று
எனக்கு மட்டும் தானே தெரியும்..

சிலசமயம் நின்று
கடையில் ஏதேனும் வாங்குவாய்
அது எல்லோருக்கும்தெரியும்;
எதற்காக நிற்கிறாய், வாங்கினாய் என்று
எனக்கு மட்டும் தானே தெரியும்..

தெருமுனை திரும்பி எனை பார்த்ததும்
அடிக்கடி மணி பார்ப்பாய் –
வெறுமனே அலைபேசியை காதில் வைத்து
வீணே யாரையேனும் அழைத்துப் பேசுவாய்
அவசரமோ; நேரமாகி விட்டதோ போல்
எல்லோரும் நினைப்பார்கள்;

ஆனால் நீ அடிக்கடி பார்க்கும் மணியிலும்
அவசியமில்லாமல் அழைத்த அழைப்பிலும் தான்
எனக்கான காதலை –
அவ்வளவு வைத்திருக்கிறாய் என்று
எனக்கு மட்டுமே தெரியும்!!
—————————————————————————-

2
தெப்படியோ
நான் விரைவாக வந்தால் நீயும் விரைவாக வருகிறாய்
தாமதமாக வந்தால் –
நீயும் தாமதாமாக வருகிறாய் –

மனதிற்கு மட்டுமே
நம்மை – சரியாக தெரிகிறது போல்!!!
—————————————————————————-

3
நீ
அருகில் வருகிறாய்
உன் கால கொலுசு சப்தம் என் மீதேறி
காதுகளில் புகுந்து –
உடம்பெல்லாம் பதிவாகி வெளி சென்று
கடக்கிறது என்னை உன்னோடு!

அந்த கொலுசின் சப்தத்தில்
உன் பதட்டமும் நீயும்
புரியவில்லை –
இப்போது அமர்ந்து உன்னையும்
உன் கொலுசையும்
நீ என்னை நெருங்கி ஒதுங்கி அவசரமாய் கடந்ததையும்
எண்ணிப் பார்க்கையில் புரிந்தது –

நீ என்னை நிமிர்ந்து பார்க்காவிட்டாலும்
நாளைக்கு என்னருகே வந்து உடலெல்லாம் புகுந்து
விலகி
ஓடி
தெருமுனையில் நின்று
திரும்பிப் பார்க்காவிட்டாலும்
மனதில் நினைத்திருப்பாய் என்று!!
—————————————————————————-

4
னக்கொன்றும் நான்
அத்தனை பெரிய –
அவசியம் இல்லை தான்;

போ..
நீ பெசாவிட்டாலென்ன,
பார்க்கா விட்டால் தான் என்ன?!!!!!!

எனக்கு நீ –
வாழுமளவு வேண்டும்;

இல்லையேல் –
உயிர் பிரியுமளவேனும்!!!
—————————————————————————-

5
ன் வெளுத்த தோலோ
கருப்பு விழியோ
புது வண்ண ஆடையோ
மயக்கும் அழகோ
உன் ஆர்பாட்டமோ
உன்னிடத்தில் காமமோ
காதலோ – ஒன்றும் வேண்டாம்

தினமும் இந்த வழியில் வந்து பொ; போதும்!!
—————————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 70) தெருமுனையில்; நின்று பார் போதும்!!

  1. samsudeen சொல்கிறார்:

    அருமையான படைப்புகள், இந்த பக்கத்தில் நான் எவ்வாறு இணைவது?

    Like

  2. வித்யாசாகர் சொல்கிறார்:

    அன்பு வணக்கம் சம்சுதீன்..

    நம் வலைதளத்தில் வலது பக்கத்தில் கீழாக பாருங்கள், அங்கே முதலில் // நம் எழுத்து பிடிக்குமா..? // என்றும், பிறகு //உங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்// என்றும் இருக்கிறதில்லையா அங்கே உங்களின் மின்னஞ்சல் முகவரியை தந்து இனைந்து கொள்ளலாம். பிறகு உங்களுக்கு நம் அனைத்து படைப்புக்களும் பதிவிடும் போதே அவ்வப்பொழுது அறிய தரப் படும்.

    மிக்க நன்றிகளும் அன்பும் உரித்தாகட்டும். தொடர்ந்து எழுத்துக்களால் இணைந்திருங்கள்..

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s