வலிக்காமல்
சலிக்காமல்
நினைவுகளிலிருந்து அற்றுப் போகாமல்
நிஜம் பூத்த மலர்களின் –
வாசத்தொடும்,
வரலாறாய் மட்டும் மிகாமலும்,
முன்னேற்றப் படிக்கட்டுகள் நிறைந்த
பல்லடுக்கு மாடிகளின் முற்றத்தில் –
மல்லிகைப் பூக்க,
ஒற்றை நிலாத் தெரிய,
மரம் செடி கொடிகளின் அசைவில் –
சுகந்தக் காற்று வீசும் –
தென்றல் பொழுதுகளுக்கிடையே;
வஞ்சனையின்றி –
உயிர்கள் அனைத்தும் வாழ
யாரையும் நோகாமல் ஒரு – கனவேனும் வேண்டும்!!
—————————————————-
வித்யாசாகர்
வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 861,167
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
உங்கள் அளவுக்கு அதிகமான ஆசை நிறைவேற எல்லாம் வல்ல இறவைனை வேண்டிக்கொள்கிறேன்.
அதுயென்ன “வரலாறாய் மட்டும் மிகாமலும்” ???
LikeLike
பெயரில் மட்டும் பெரிய பெயராகவே வரலாறு நெடுக்க இருக்கிறோம் தமிழராய். ஆனால், உண்மையில் இன்று வாழும் நிலை என்பது வேறாகவே உள்ளது.
அப்படி வரலாற்றிற்காக மட்டும் நம் வாழ்தல் இல்லாமல், வரலாறாக மட்டுமே நம் நகர்வுகள் காலத்தினூடே மிகாமல்;
எப்பொழுதிற்குமாய்; உண்மை மகிழ்வுகளுடனேயே நாம் வாழ்ந்ததாகவும் வாழ்வதாகவும் நம் வாழ்க்கை மிஞ்சட்டுமே……, இருக்கட்டுமே…. எனும் ஏக்கத்தின் வரிகளது (என் அறிவிற்கு எட்டியவரை; பிரபா)
LikeLike
அச்சு அசல் பாரதியின் வடிவம்… இவன் கவிஞன்!
LikeLike
மிக்க நன்றிகளும் அன்பும் சகோதரர்.
சொன்ன வார்தியினை ஏற்கவோ மறுக்கவோ தெரியாது சொன்னவரின் அன்பில், அத்தகு மதிப்பில் மகிழ்வேன்..
LikeLike
சரியே !!!!
பெயரளவில் மட்டும் இல்லாமல் வாழ்வோம்.
உங்கள் சிந்தனை எனக்கும் கனவுகள் ஆகட்டும்!!
LikeLike
மிக்க அன்பும் வாழ்த்துக்களும் பிரபா…, அங்ஙனமே உரித்தாக இயற்கை அமையப் பெறட்டும்!!
LikeLike
கனவு காணுங்கள் — ஆமாம்; இன்னொரு அப்துல்கலாம்!
லக்ஷ்மிநாதன்
LikeLike
மிக்க நன்றி லக்ஷ்மி..
உங்களின் அன்பும் என் மீது கொண்டுள்ள நம்பிகையும் மகிழ்ச்சி அளிக்கிறது. எண்ணங்களே செயல் எனில்; அதை நல்லதாய் கொள்வோமே… எனும் தெளிவு இது!!
LikeLike
தங்களின் மின்னஞ்சல் மற்றும் பதிவுகளை காண்பதில் மகிழ்ந்தேன்..
சிவா
LikeLike
நானும்; மிகையாய் மானசீகமாய்..
மிக்க அன்பும் வணக்கமும். எழுத்தினால் எண்ணங்களால் தொடர்ந்து இணைந்தே இருப்போம்… நன்றி தங்களின் வருகைக்கு!!
LikeLike
உங்களின் எழுத்துப்பயணம் தொடர எனது வாழ்த்துக்கள் அண்ணா
அன்புடன்
ரூபன்
LikeLike
மிக்க நன்றிப்பா… நீங்களெல்லாமிருக்க நம் பயணம் நல் பயணமே.. என்று எண்ணுகிறேன் ரூபன். இயன்றதை எழுத்தின் வழியே செய்வோம். தேவையை எழுத்தும் பெற்றுத் தரும்..
LikeLike
அருமையான ரசனை அன்பான வேண்டுகோள்…..
உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்………
LikeLike