நாட்கள் தொலைத்திடாத
அந்த நினைவுகளில்
சற்றும் குறையாமல் இருக்கிறாய் நீ;
உனை பார்த்த பழகிய உன்னோடு பேசிய
முதல் பொழுது முதல் தருணம் –
உடையாத கண்ணாடியின் முகம் போல
பளிச்சென இருக்கிறது உள்ளே;
ஓடிவந்து நீ
சட்டென மடியில் அமர்ந்த கணம்
என்னை துளைத்து துளைத்து பார்த்த
இருவிழிகள்,
எனக்காக காத்திருக்கும் உனது தவிப்புகள் என
எல்லாமே உன்னை எனக்குள் –
மறவாமல் வைத்திருக்கிறது இன்னும்;
எனக்காக இல்லையென்றாலும்
உனக்காகவேனும் வந்து –
உன் வாசலில் நின்று நீ ஓடிவந்து கட்டிக் கொள்ளுமுன்
ஸ்பரிசத்தை எல்லாம் சேகரித்து –
இன்றுவரை பத்திரமாக உணர்வுகளில்
வைத்திருக்கிறேன்;
பெரிதாக அதையெல்லாம் எண்ணி
கதையெழுதும் காதலெல்லாம்
அல்ல; நம் காதல்;
காதலென்ற வார்த்தை கூட நம்
உதடுகளை ஒருவேளை சுடச்செய்யலாம்,
அதையெல்லாம் கடந்து
நமக்கிடையான ஒரு புரிதல்; ஒரு ஆழமான அன்பு அது.
திரும்ப எடுக்க இயலா நீளக் கிணற்றுக்குள்
தவறிப் போட்டுவிட்ட – கல் போல
மனதிற்குள் மனதை போட்டுவிட்டு
யாரிடமே சொல்லிக் கொள்ளாத தவிப்பு அது.
சொல்லியிருந்தால் மட்டும் உலகம்
அதற்கு என்ன பெயர் வைத்திருக்குமோ
தெரியாது – ஆனால் –
காதலென்னும் அவசியமோ
நட்பென்று சொல்லும் பெரிய வார்த்தைகளோ
அல்லது ‘அத்தனை’ இடைவெளியோ கூட
அவசியப்பட்டிருக்க வில்லை நமக்கிடையே;
அப்படி –
சேருமிடமே தெரியாத
வானமும் பூமியும் போல்
எங்கோ ஒரு தூரத்தில்
ஒட்டிக் கொண்டு கிடந்தது நம் மனசு;
நானென்றால் நீ ஓடிவருவதும்
நீயென்றால் நான் காத்திருப்பதும்
எச்சில் பாராமல் –
தொடுதலுக்கு கூசாமல் –
ஆண் பெண் பிரிக்காமல் –
எந்த வரையறையுமின்றி –
உரிமையே எதிர்பாராது – மனதால் மட்டும்
நெருங்கியிருந்த உணர்வு
சொன்னால் மட்டுமிப்போ யாருக்குப் புரிந்துவிடும்???
தெரிந்தால் புரிந்துக் கொள்ளக் கூட
திராணியின்றி நகைக்கும்
உலகம் தானே இது;
அட, உலகமென்ன உலகம்;
உலகத்தை தூக்கி வீசிவிட்டு
நாம் கூட நம்மை வெளிப் படுத்திக் கொள்ள
தயாரில்லை என்பதற்கான காரணத்தை
காலம் மட்டுமே ஒருவேளை
அறிந்திருக்கக்கூடும்;
எப்படியோ; யார்மீதும்
குற்றம் சொல்வதற்கின்றி பிரிந்தபின்
இன்று – அறுத்துப்போட்ட உயிர்போல வலிக்கிறதே
உனக்கும் எனக்கும் மட்டும்;
தூரநின்று கண்சிமிட்டும்
அந்த குழந்தையின் சிரிப்புப்போல
நீ சிரிக்கும் அந்த சிரிப்பின்
நினைவுகளில் தான்
கட்டிவைத்திருக்கிறேன் என்னை –
வாழ்விற்குமாய்; இப்போதும்!!
இப்படியே கடந்து கடந்து
ஓர்நாளில் –
என் உயிர்முடுச்சு அவிழ்ந்து
நான் கீழே விழுகையில் –
ஒரு சொட்டுக் கண்ணீராகவாவது
நீ வந்து நிற்கையில் –
என் உடம்பு சாம்பலாய் பூத்திருக்கும்
நீ விழுந்து அழுது புரண்டால் – உனக்கு
வலிக்காமல் தாங்கிக்கொள்ளும்!!
————————————————————————-
வித்யாசாகர்
Super, super……..sir
LikeLike
http://vidhyasaagar.com/2009/12/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/ மிக்க நன்றி மா..
LikeLike
congratulation
LikeLike
மிக்க நன்றி சுகந்தினி. வலிக்க வலிக்க அழாமல் சேகரித்து வைத்த நிறைய பேரின் கண்ணீரிது. வரிகளால் கோர்த்ததில் வார்த்தைகள் கவிதையும் ஆனது. எங்கோ யாருக்கோ புரியும், யாரேனும் சிலருக்கு புரியாமலும் போகும்..
LikeLike
//*எ*ன் உடம்பு சாம்பலாய் பூத்திருக்கும்
நீ விழுந்து அழுது புரண்டால் – உனக்கு
*வலிக்காமல் தாங்கிக்கொள்ளும்!!*//
காதலின் வலிமையையும் வலியையும் அருமையாக படைத்துள்ளீர்கள் மிக நன்று சார்
LikeLike
மிக்க நன்றிப்பா. பிறருக்கு வலிக்கக் கூடாதே என்று தனக்குள்ளேயே வலித்துக் கொண்ட உணர்வுகள் இது…
LikeLike
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
LikeLike
உண்மையான, புனிதமான, ஆழமான அன்பையும் , வலியையும் மிகவும்
உணர்வு பூர்வமாக எழுதி , இறுதியில் கண்ணீர் சிந்த வைக்கும்
வரிகளோடு இப்படைப்பை அருமையாக படைத்து உள்ளீர்கள்.
வாழ்துக்கள்!
LikeLike
மிக்க நன்றி உமா, நன்றி ரத்னவேல். நாமெல்லோருமே அன்பினாலும் நட்பினாலும் உருகிப் போகும் இதயங்களை சுமந்து தானே திரிகிறோம்; அந்த இதயத்தில் நமை கடந்தும் நமக்கே தெரியாமல்; ஏன் உலகிற்கே தெரியாமல் கூட ஒருசில முகங்கள் இருந்து தானே கொள்கின்றன? அதை சற்று வெளிக்காட்டும் கவிதை இது.
மிக்க நன்றி தங்களின் கருத்து வழங்கியமைக்கு..
LikeLike
பூத்திருக்கும் சாம்பல்-அந்த
பூவை அழுதே புலம்பல்
காத்திருக்கும் தாங்க-மனம்
கனக்க பாடி னீங்க
(பா)த்திருக்கும உலகம்-உங்கள
பயணம் நுதலில் திலகம்
நே(ற்)த்து இதனை கண்டேன்-நெஞ்சம்
நினைத் ததையே விண்டேன்!!
புலவர் சா இராமாநுசம்
புலவர்குரல் சென்னை 24
LikeLike
தூரநின்று கண்சிமிட்டும்
அந்த குழந்தையின் சிரிப்புப்போல
நீ சிரிக்கும் அந்த சிரிப்பின்
நினைவுகளில் தான்
கட்டிவைத்திருக்கிறேன் என்னை –
வாழ்விற்குமாய்; இப்போதும்!!anupavam illai
LikeLike