84 உடையாத கண்ணாடியில் உலகிற்குத் தெரியாத நம் முகங்கள் !!

நாட்கள் தொலைத்திடாத
அந்த நினைவுகளில்
சற்றும் குறையாமல் இருக்கிறாய் நீ;

னை பார்த்த பழகிய உன்னோடு பேசிய
முதல் பொழுது முதல் தருணம் –
உடையாத கண்ணாடியின் முகம் போல
பளிச்சென இருக்கிறது உள்ளே;

டிவந்து நீ
சட்டென மடியில் அமர்ந்த கணம்
என்னை  துளைத்து துளைத்து பார்த்த
இருவிழிகள்,
எனக்காக  காத்திருக்கும் உனது தவிப்புகள் என
எல்லாமே உன்னை எனக்குள் –
மறவாமல் வைத்திருக்கிறது இன்னும்;

னக்காக இல்லையென்றாலும்
உனக்காகவேனும் வந்து –
உன் வாசலில் நின்று நீ ஓடிவந்து கட்டிக் கொள்ளுமுன்
ஸ்பரிசத்தை எல்லாம் சேகரித்து –
இன்றுவரை பத்திரமாக உணர்வுகளில்
வைத்திருக்கிறேன்;

பெரிதாக அதையெல்லாம் எண்ணி
கதையெழுதும் காதலெல்லாம்
அல்ல; நம் காதல்;

காதலென்ற வார்த்தை கூட நம்
உதடுகளை ஒருவேளை சுடச்செய்யலாம்,
அதையெல்லாம் கடந்து
நமக்கிடையான ஒரு புரிதல்; ஒரு ஆழமான அன்பு அது.

திரும்ப எடுக்க இயலா நீளக் கிணற்றுக்குள்
தவறிப்  போட்டுவிட்ட – கல் போல
மனதிற்குள் மனதை போட்டுவிட்டு
யாரிடமே சொல்லிக் கொள்ளாத தவிப்பு அது.

சொல்லியிருந்தால் மட்டும் உலகம்
அதற்கு என்ன பெயர் வைத்திருக்குமோ
தெரியாது – ஆனால் –

காதலென்னும் அவசியமோ
நட்பென்று சொல்லும் பெரிய வார்த்தைகளோ
அல்லது ‘அத்தனை’ இடைவெளியோ கூட
அவசியப்பட்டிருக்க வில்லை நமக்கிடையே;

ப்படி –
சேருமிடமே தெரியாத
வானமும் பூமியும் போல்
எங்கோ ஒரு தூரத்தில்
ஒட்டிக் கொண்டு கிடந்தது நம் மனசு;

நானென்றால் நீ ஓடிவருவதும்
நீயென்றால் நான் காத்திருப்பதும்
எச்சில் பாராமல் –
தொடுதலுக்கு கூசாமல் –
ஆண்  பெண் பிரிக்காமல் –
எந்த  வரையறையுமின்றி –
உரிமையே எதிர்பாராது – மனதால்  மட்டும்
நெருங்கியிருந்த உணர்வு
சொன்னால் மட்டுமிப்போ யாருக்குப் புரிந்துவிடும்???

தெரிந்தால் புரிந்துக் கொள்ளக் கூட
திராணியின்றி  நகைக்கும்
உலகம் தானே இது;

அட, உலகமென்ன உலகம்;

உலகத்தை தூக்கி வீசிவிட்டு
நாம் கூட நம்மை வெளிப் படுத்திக் கொள்ள
தயாரில்லை என்பதற்கான காரணத்தை
காலம் மட்டுமே ஒருவேளை
அறிந்திருக்கக்கூடும்;

ப்படியோ; யார்மீதும்
குற்றம் சொல்வதற்கின்றி பிரிந்தபின்
இன்று – அறுத்துப்போட்ட உயிர்போல வலிக்கிறதே
உனக்கும் எனக்கும் மட்டும்;

தூரநின்று கண்சிமிட்டும்
அந்த குழந்தையின் சிரிப்புப்போல
நீ சிரிக்கும் அந்த சிரிப்பின்
நினைவுகளில் தான்
கட்டிவைத்திருக்கிறேன் என்னை –
வாழ்விற்குமாய்; இப்போதும்!!

ப்படியே கடந்து கடந்து
ஓர்நாளில் –
என் உயிர்முடுச்சு அவிழ்ந்து
நான் கீழே விழுகையில் –

ஒரு சொட்டுக் கண்ணீராகவாவது
நீ வந்து நிற்கையில் –

ன் உடம்பு சாம்பலாய் பூத்திருக்கும்
நீ விழுந்து அழுது புரண்டால் – உனக்கு
வலிக்காமல் தாங்கிக்கொள்ளும்!!
————————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to 84 உடையாத கண்ணாடியில் உலகிற்குத் தெரியாத நம் முகங்கள் !!

  1. suganthiny75 சொல்கிறார்:

    Super, super……..sir

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி சுகந்தினி. வலிக்க வலிக்க அழாமல் சேகரித்து வைத்த நிறைய பேரின் கண்ணீரிது. வரிகளால் கோர்த்ததில் வார்த்தைகள் கவிதையும் ஆனது. எங்கோ யாருக்கோ புரியும், யாரேனும் சிலருக்கு புரியாமலும் போகும்..

      Like

  2. anpudan vijeyananth சொல்கிறார்:

    //*எ*ன் உடம்பு சாம்பலாய் பூத்திருக்கும்
    நீ விழுந்து அழுது புரண்டால் – உனக்கு
    *வலிக்காமல் தாங்கிக்கொள்ளும்!!*//
    காதலின் வலிமையையும் வலியையும் அருமையாக படைத்துள்ளீர்கள் மிக நன்று சார்

    Like

  3. rathnavel natarajan சொல்கிறார்:

    நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    Like

  4. Umah thevi சொல்கிறார்:

    உண்மையான, புனிதமான, ஆழமான அன்பையும் , வலியையும் மிகவும்
    உணர்வு பூர்வமாக எழுதி , இறுதியில் கண்ணீர் சிந்த வைக்கும்
    வரிகளோடு இப்படைப்பை அருமையாக படைத்து உள்ளீர்கள்.
    வாழ்துக்கள்!

    Like

  5. வித்யாசாகர் சொல்கிறார்:

    மிக்க நன்றி உமா, நன்றி ரத்னவேல். நாமெல்லோருமே அன்பினாலும் நட்பினாலும் உருகிப் போகும் இதயங்களை சுமந்து தானே திரிகிறோம்; அந்த இதயத்தில் நமை கடந்தும் நமக்கே தெரியாமல்; ஏன் உலகிற்கே தெரியாமல் கூட ஒருசில முகங்கள் இருந்து தானே கொள்கின்றன? அதை சற்று வெளிக்காட்டும் கவிதை இது.

    மிக்க நன்றி தங்களின் கருத்து வழங்கியமைக்கு..

    Like

  6. ramanujam சொல்கிறார்:

    பூத்திருக்கும் சாம்பல்-அந்த
    பூவை அழுதே புலம்பல்
    காத்திருக்கும் தாங்க-மனம்
    கனக்க பாடி னீங்க
    (பா)த்திருக்கும உலகம்-உங்கள
    பயணம் நுதலில் திலகம்
    நே(ற்)த்து இதனை கண்டேன்-நெஞ்சம்
    நினைத் ததையே விண்டேன்!!

    புலவர் சா இராமாநுசம்
    புலவர்குரல் சென்னை 24

    Like

  7. suganthiny75 சொல்கிறார்:

    தூரநின்று கண்சிமிட்டும்
    அந்த குழந்தையின் சிரிப்புப்போல
    நீ சிரிக்கும் அந்த சிரிப்பின்
    நினைவுகளில் தான்
    கட்டிவைத்திருக்கிறேன் என்னை –
    வாழ்விற்குமாய்; இப்போதும்!!anupavam illai

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s