86 ஞானமடா நீயெனக்கு…

1
ப்பா சொல்லுடா என்றேன்
சொன்னாய்,
அம்மா சொல்லுடா என்றேன்
சொன்னாய்,
அண்ணா சொல்லுடா என்றேன்
சொன்னாய்,
போடா சொல்லு என்றேன்
போடா என்றாய்,
பொருக்கி சொல் என்றேன்
நீயுமென்னைப் பொருக்கி என்றாய்;

எதை கற்றுக் கொடுக்கப் பட்டுள்ளதோ
அதையே நானும் கற்றிருக்கிறேன் என்பதை
எனக்கும் புரியவைத்த – ஞாமடா நீயெனக்கு!!
—————————————————————————-

2
சி
றகடிக்கும்
பறவைக் குஞ்சு போல்
எனைக்கன்டதும் அப்பே அப்பே என்று
தாவி தாவி பறப்பாய் நீ;

வயிற்றில் சுமந்த பட்டாம்பூச்சி பற்றி
எனக்குத் தெரியவில்லை என்றாலும்
மனதெல்லாம் உனை எண்ணி –
ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள்
சந்தோசமாய் பறக்கும்!!
————————————————————-

3
ப்படியோ உனக்கு என் மடி
சொர்கபுரியாய் சொக்குகிறதோ;

மடியில் படுத்ததும்
தூங்கிப் போவாய்
நான் உன் முகம் பார்த்தவாறே
தலை தடவி தடவி விடுவேன்;

தூக்கம் உனக்கு பரிசான
அந்த கணமெல்லாம் –
வாழ்க்கை எனக்கும் வசமாகும்!
————————————————————-

4
தை மென்றாலும்
நாக்கு தட்டி கேட்பாய்;

நானும் மென்றதை எல்லாம்
நைய மென்று உனக்கு எச்சிலோடு
தருவேன்;

நீ ஆர்வத்தோடு தின்கையில்
தின்றது உனக்கு இனித்ததோ
அல்லது எச்சில் இனித்ததோ என்று
பூரிப்பில் முகமெல்லாம் பூத்துப் போவேன்

நீ மீண்டும் நாக்கு தட்டி தட்டி வருவாய்

உன்னை போல் இன்னும் நான்கு
குழந்தைகள் பிறந்தாலென்ன என்று
மனதார எண்ணிக் கொள்வேன்!!
—————————————————————–

5
சிலநேரம் உன் அழுக்கு ஆடை கழற்றி
நுகர்ந்துப் பார்ப்பேன்;

நுகர்ந்து நுகர்ந்து
உன் வாசத்தை எல்லாம்
உயிர் முழுக்க சேமிப்பேன்;

உனை விட்டு பிரிந்திருக்கும்
சிலநேரம்
உன் வாசத்தில் உயிரெல்லாம் மணக்கும்;

நினைவுகள் உள்ளிருந்து உன் நினைவாய் எனக்குள்
நீயாகவே பூக்கும்!!
————————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , , . Bookmark the permalink.

12 Responses to 86 ஞானமடா நீயெனக்கு…

  1. Umah thevi சொல்கிறார்:

    // மடியில் படுத்ததும்
    தூங்கிப் போவாய்
    நான் உன் முகம் பார்த்தவாறே
    தலை தடவி தடவி விடுவேன்//

    ஆழமான பாசத்தின் வெளிபாடு..
    மிக அருமை!!

    Like

  2. rathnavel natarajan சொல்கிறார்:

    நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    Like

  3. munu.sivasankaran சொல்கிறார்:

    ”சில நேரம் உன் அழுக்கு ஆடை கழற்றி முகர்ந்து பார்ப்பேன்..”
    என் மனம் வெளுத்தக் கவிதை..!

    Like

  4. Rajarajeswari சொல்கிறார்:

    அழகான ஞானப்பகிர்வாக அருமையான கவிதைப் பகிர்விற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    Like

  5. suganthiny75 சொல்கிறார்:

    சிறகடிக்கும்
    பறவைக் குஞ்சு போல்
    எனைக்கன்டதும் அப்பே அப்பே என்று
    தாவி தாவி பறப்பாய் நீ;

    வயிற்றில் சுமந்த பட்டாம்பூச்சி பற்றி
    எனக்குத் தெரியவில்லை என்றாலும்
    மனதெல்லாம் உனை எண்ணி –
    ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள்
    சந்தோசமாய் பறக்கும்!!
    ————————————————————-

    ஆனாலும் சும்மா சொல்ல கூடாது இத்தனை அன்பும் தேக்கி
    வச்சிருக்கீங்க எனக்கு ஒரே பொறாமையா இருக்கு.

    Like

  6. அன்புடன் மலிக்கா சொல்கிறார்:

    தூக்கம் உனக்கு பரிசான
    அந்த கணமெல்லாம் –
    வாழ்க்கை எனக்கும் வசமாகும்!//

    கவிதை வரிகளுக்குள் கரைவதுபோன்றொரு உணர்வு. அருமையான படைப்பு.. வாழ்த்துகள் சகோ..

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s