நானும் அவளும் மேகத்தின் இரு சிறகு போல..

து ஒரு கண்ணாடி உடையும்போன்ற
மனசு;

எப்படியோ ஆண் பெண்
அவள் அவன்
அது இதுவென்றுச் சொல்லி உடைத்துவிடுவதில்
என்னதானிருக்கோ (?)
ஆனால் –
உடையாமல் பார்த்துக் கொள்ளும் அன்பில் தான்
அவளும் நானுமிருந்தோம்;

தேனீர் தருவாள்
இனிப்பது அவளாகவே இருப்பாள்,
சோறு போடுவாள்
உண்டது தனிச் சுகமாகயிருக்கும்,
தோள் மீது சாய்ந்துகொள்வாள்
சாய்ந்துக் கிடப்பதை நானென்றே உணர்வேன்;

தூக்கம் கலையும்
அருகே வரைந்ததுபோல் கிடப்பாள்,
தூங்கிப்போவேன் ரசித்தே தூக்கம் தொலைப்பாள்
அடடா அடடா வாழ்க்கை இதுவென்று இனிக்கும்
இதுபோலிணையாப் பிற இதயமெண்ணித் துடிக்கும்;

இருப்பது ஒரு வாழ்வு – இதிலெதற்கு
அவளும் அவனும்?
நீயும்  நானுமென சிறகடித்துப் பறப்போம்
ஒரு மனதின் இரு இறக்கை விரிப்போம்
இரவையும் பகலையும் ஏமாறச் செய்வோம்
எவன்வீட்டுச் சொத்து அது; அன்பை
வாரி வாரி நெஞ்சக்கூட்டில் நிறைப்போம்;
—————————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to நானும் அவளும் மேகத்தின் இரு சிறகு போல..

  1. munusivasankaran சொல்கிறார்:

    இரவையும் பகலையும் ஏமாறச் செய்வோம்
    எவன்வீட்டுச் சொத்து அது; அன்பை
    வாரி வாரி நெஞ்சக்கூட்டில் நிறைப்போம்;”

    அனுபவத்தில் மிளிரும் வரிகள்..!
    கனிந்த அன்பிற்குக் காலம் ஏது..?
    வாழ்த்துக்கள்..!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s