அது ஒரு கண்ணாடி உடையும்போன்ற
மனசு;
எப்படியோ ஆண் பெண்
அவள் அவன்
அது இதுவென்றுச் சொல்லி உடைத்துவிடுவதில்
என்னதானிருக்கோ (?)
ஆனால் –
உடையாமல் பார்த்துக் கொள்ளும் அன்பில் தான்
அவளும் நானுமிருந்தோம்;
தேனீர் தருவாள்
இனிப்பது அவளாகவே இருப்பாள்,
சோறு போடுவாள்
உண்டது தனிச் சுகமாகயிருக்கும்,
தோள் மீது சாய்ந்துகொள்வாள்
சாய்ந்துக் கிடப்பதை நானென்றே உணர்வேன்;
தூக்கம் கலையும்
அருகே வரைந்ததுபோல் கிடப்பாள்,
தூங்கிப்போவேன் ரசித்தே தூக்கம் தொலைப்பாள்
அடடா அடடா வாழ்க்கை இதுவென்று இனிக்கும்
இதுபோலிணையாப் பிற இதயமெண்ணித் துடிக்கும்;
இருப்பது ஒரு வாழ்வு – இதிலெதற்கு
அவளும் அவனும்?
நீயும் நானுமென சிறகடித்துப் பறப்போம்
ஒரு மனதின் இரு இறக்கை விரிப்போம்
இரவையும் பகலையும் ஏமாறச் செய்வோம்
எவன்வீட்டுச் சொத்து அது; அன்பை
வாரி வாரி நெஞ்சக்கூட்டில் நிறைப்போம்;
—————————————————————————-
வித்யாசாகர்
இரவையும் பகலையும் ஏமாறச் செய்வோம்
எவன்வீட்டுச் சொத்து அது; அன்பை
வாரி வாரி நெஞ்சக்கூட்டில் நிறைப்போம்;”
அனுபவத்தில் மிளிரும் வரிகள்..!
கனிந்த அன்பிற்குக் காலம் ஏது..?
வாழ்த்துக்கள்..!
LikeLike
வாழ்ந்தவரின் வாழ்பவரின் வார்த்தைகள் உற்சாகத்தைத் தருகிறது.மிக்க நன்றி ஐயா..
LikeLike