அம்மாக்கள் இறவாத வானமெங்கே.. (?)

யதாக வயதாக
வருகிறதந்த பயம்
என்னம்மா பற்றியந்த பயம்;

மரணத்தைக் கண்டு
முதலில் அஞ்சவைப்பவள்
அவள் தான் என் அம்மா மட்டும் தான்;

அம்மாக்கள் இறக்கையில்
நண்பர்கள் அழுகையில்
அம்மாவைதான் முதலில் நினைத்தழுகிறேன் நான்;

இரவில் நனைந்த என் தலையணை
எனதம்மாவின் நினைவைத் தான்
நிறையச் சுமந்திருக்கிறது;

நிலாச்சோறு நாட்களின்
இனிமையைப் போலவே
அம்மா இல்லாத நொடிகளும் கொடுமையானது;

வெறும் அழைக்கவும்
அழைக்கையில் இருக்கேன்பா என்று
சொல்லவும் மட்டுமேனும் அம்மா வேண்டும்;

அம்மாவை அழைத்த நாளும்
அவள் என்னோடு பேசியிருக்கும் பொழுதுமே
என் உயிருள்ள பொழுதாகும்..

அவளில்லாத பொழுதை எண்ணும்
நொடியில் மட்டுமே
எனக்கு வாழ்க்கை அப்படி வலிக்கிறது;

அம்மா இல்லாத பிள்ளைகள்
பாவம்
முள்ளில் நடப்பவர்கள் அவர்கள்;

மறுசட்டை எடுக்கவும்
ஒருவேளைப் பட்டினிக்கு வருந்தவும்
அம்மாப் போல் உலகில் யார் வருவா ?

முகத்தில் சிரிப்புடுத்தி
மஞ்சளாய் சிரிக்கும் நிலவு
வராதஇருளில் வரும் பகல் வெண்மையற்றது;

அம்மாவிற்காக நான்
தினம் தினம் நிறைய அழுகிறேன்
நிறைய சேமிக்கிறேன் நாட்களை; ஆனாலும்

சுகர் என்றும் பிரசர் என்றும் சொல்லிக்கேட்கையில்
அம்மாயென்றும் ஒரு மனசு பதறுவதை
கடவுள் புரிவாரா தெரியாது;

புரிவாரெனில் மட்டும் விடியட்டும்
எனக்கான காலை..
——————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, கல்லும் கடவுளும்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s