செவிலித் தாயிக்கு மனசு வானம் போல..

பிணம்தின்னும் சாமியிடம்
வரம் கேட்கும் பூதங்கள்,
மலமள்ளி மூத்திரம் துடைத்தும்
மனதால் மணக்கும் சாமிகள்;

அறுந்தக் கழுத்தில் ரத்தம் கசிய
கண்ணீரால் கழுவும் தெரசாக்கள்,
தாயைப் போல கருணைப் பொங்க
ஆலயம் தொழும் தெய்வங்கள்;

நீதி தேடி ஒதுங்கிடாது சேவை-
யாற்றும் தேவதைகள்,
பாவமூட்டையை தான்சுமந்து
வியாதியை போக்கும் சகோதரிகள்;

காலவிளக்கை ஊதிவிட்டு; கருணையில்
தலைகோதும் ஏழைவீட்டின் வெளிச்சங்கள்,
மாயைதனை விளக்கி; மூடம் மறுத்து
அன்பே ஞானமென்றுப் போதிக்கும் அன்னைகள்;

காலையும் மாலையும் உழைத்து
கன்னிப்பருவம் தொலைத்தும் காசுக்குச் சாயாத தராசுகள்;
வெள்ளை ஆடையுடுத்தி ரத்தக் கரைபடிந்தும்
மனதில் அழுக்கில்லா தோழிகள்;

கற்றுப் பல தேர்ந்து; சொட்டும் வியர்வை நனைக்க
சற்றும் சளைக்காது உழைக்கும் தேனீக்கள்;
கல்லாதோரானாலும் கால்கழுவி, பாகுபாடு கரையகற்றும்
பெரிய மனசுள்ளத் தாயிகள்!
—————————————————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கல்லும் கடவுளும்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s