உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு

டம்பு சுடும் சூரியனை
விழுங்கி மிதிக்கும் வரப்பெல்லாம்
வியர்வையால நனைச்ச மண்ணு
உழவர் உயிரைப்பறிக்கும் பச்சமண்ணு;

புலரும் காலைப் பொழுதை எமக்கு
ஒப்பாரியா கொடுத்த மண்ணு
படி அரிசி நெல்லு தேடி
தெருவெல்லாம் எமை விதைச்ச மண்ணு;

பாவிமக பொறந்த நேரம்
பச்சவயல் காயுந் தூரம்
வாழ்க்கையது விடியலை சாமி,
ஒரு மரணம் கேட்டும் கிடைக்கலை சாமி;

வீட்டுக் கிணறு வற்றிப் போச்சி
நாட்டுநடப்பு நாசம் ஆச்சி
ஓடிப் பாயும் நதிக்குக் கூட
அணையைக் கட்டும் அற்ப ஆட்சி;

இனி ஏர் புடிச்சி யாரு உழ
ரத்தம் உறிஞ்சும் வயலில் அழ
பாவி சனம் புரியா மண்ணுல
ஜீவன் செத்துதொலையும் கேட்க ஆளில்ல;

வெள்ளைவேட்டி கிழித்து நனைத்து
வயித்துமேல கட்டியாச்சி
எம் புள்ள அழுதே பாலு வேணும்
அந்தப் பாழும்மழையும் தோத்துப் போச்சு;

யாரை நம்பி நாளை எழ
ஊரை நம்பி ஓடி விழ
அரசியல் சாயம் கரைந்த தண்ணில
கொஞ்சம் விஷம் முளைச்சா பிறப்பு தீரும்

இந்த வலிக்கும்உசிரு விட்டேப் போகும்..
————————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கல்லும் கடவுளும்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு

  1. Manikandan.Duai சொல்கிறார்:

    ஒப்பாரி தலைப்பு விவசாயமா sir….

    Like

வித்யாசாகர் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s